News Just In

9/26/2023 10:19:00 AM

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கா செல்லும் பணிப்பெண்கள் அனுபவிக்கும் மற்றுமொரு கொடுமை!

உணவுக்கு பதிலாக கொங்கிரீட் ஆணிகள்; இலங்கை பெண்ணுக்கு நிகழ்ந்த கொடுமை!



சவூதி அரேபியாவிற்கு வீட்டுச் வேலைக்காகச் சென்ற பணிப்பெண் ஒருவர் வயிற்றில் ஆணியுடன் இலங்கைக்கு வந்துள்ள சம்பவமொன்று மாத்தளை எல்கடுவ பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இவருக்கு உணவுக்கு பதிலாக ஐந்து இரும்பு கொங்கிரீட் ஆணிகள் மற்றும் துணி உலர்த்துவதற்குப் பயன்படுத்தப்படும் இரும்பு ஸ்பிரிங் ஒன்றை விழுங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவின் தைட் பிரதேசத்தில் வீட்டுப் பணியாளராகப் பணிபுரிந்து வந்த மாத்தளை எல்கடுவ தேயிலைத் தோட்டத்தில் வசித்து வந்த எம்.எஸ் தியாகா செல்வி என்ற 21 வயதான ஒரு பிள்ளையின் தாய் ஒருவரே இவ்வாறு ஆணிகளை விழுங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

சவூதி வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர் ஒருவரின் நேரடித் தலையீட்டினால் சில தினங்களுக்கு முன்னர் தூதரகத்தின் ஊடாக அப் பெண் இலங்கைக்கு அழைத்துவரபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது மகளுக்கு நடந்த கொடுமை தொடர்பில் அவரது தாயார் தியாகு குமாரி வத்தேகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் கொழும்பில் உள்ள தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமொன்றின் ஊடாக வீட்டு வேலைக்காக சென்றுள்ளார்.

அங்கு உணவின்றி கடும் அழுத்தத்திற்கு உள்ளான போது ​​தனது தாயாரிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து வௌிநாட்டு முகவர் நிறுவனத்திற்கு தெரிவித்ததால் கோபமடைந்த வீட்டு உரிமையாளர்களான மகளும் தாயும் சேர்ந்து தன்னை கொடூரமாக தாக்கியதாகவும், 5 கொங்கிரீட் ஆணிகளை விழுங்கும்படி கட்டாயப்படுத்தியதாகவும் அவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவுக்கு பதிலாக இரும்பு ஆணியை விழுங்க மறுத்ததால் தான் கடுமையாக தாக்கப்பட்டதாகவும் தாங்க முடியாமல் ஆணியை விழுங்கியதாகவும் கூறியுள்ளார்.

பின்னர் துணிகளை உலர்த்துவதற்கு பயன்படுத்தப்படும் வெள்ளை இரும்பினால் செய்யப்பட்ட ஸ்பிரிங்கினை விழுங்கியதாகவும், அது தனது தொண்டையில் சிக்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல நாட்களுக்குப் பிறகு வயிறு மற்றும் வாயில் இருந்து இரத்தம் வரத் தொடங்கியபோது ​​வீட்டு உரிமையாளர்கள் உள்ளூர் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதாக செல்வி தெரிவித்துள்ளார்.

எனினும் அங்கிருந்த வைத்தியர்கள் பெண்ணின் வயிற்றில் ஐந்து இரும்பு ஆணிகளைப் பார்த்ததாகவும் அதற்கு சிகிச்சை அளிக்க முன்வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் அந்நாட்டு பொலிஸார் வந்து அவரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

No comments: