News Just In

9/06/2023 09:57:00 AM

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 3A சித்தி பெற்றவர்கள் தொடர்பான அறிவிப்பு!



2022ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையில் 9,904 மாணவ மாணவியர் மூன்று பாடங்களிலும் ஏ சித்தி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இதேவேளை பரீட்சைக்கு தோற்றிய மாணவ மாணவியரின் 63. 3 விதமான மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்திற்கு செல்லும் தகுதி கிடைக்க பெற்றுள்ளது.

உயிரியல் பிரிவில் 817 பேரும், பௌதிக விஞ்ஞான பிரிவில் 1068 பேரும், வர்த்தகப் பிரிவில் 4198 பேரும், கலை பிரிவில் 3622 பேரும், பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் 90 பேரும், உயிரியல் தொழில்நுட்ப பிரிவில் 73 பேரும் இவ்வாறு மூன்று ஏ சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

No comments: