News Just In

8/08/2023 02:18:00 PM

75வது ஆண்டு பவள விழாவை முன்னிட்டு வரையப்பட்ட சுவர் ஓவியங்கள் திறந்து வைப்பு!



(நூருல் ஹுதா உமர்)

கல்முனை கல்வி வலய கல்முனை கமு/கமு/ அல்-பஹ்ரியா மகா வித்தியாலயத்தின் 75வது ஆண்டு நிறைவின் பவள விழாவை முன்னிட்டு இப்பாடசாலையில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் அணுசரனையில் பாடசாலையின் சுவர்களில் கடந்த இரண்டு மாதங்களாக வரையப்பட்ட ஓவியங்கள் இன்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம்.பைசால் அவர்களின் வழிகாட்டலில் இவ் ஓவியங்களை வரைவதற்கு பொறுப்பான ஒருங்கிணைப்பாளர்களான எஸ்.இஸட்.எம். ஸ்னூஸ், பி.எம்.றுக்ஸான் மற்றும் ஏ.தாரிக் ஆகியோரின் ஏற்பாட்டில் இன்று பாடசாலை அதிபரினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர் எம்.ஏ.ஸலாம், ஒழுக்காற்றுக் குழுத் தலைவர் ஆசிரியர் எம்.பி.எம்.லாபீர், விளையாட்டு பிரிவுப் பொறுப்பாளர் ஆசிரியர் யூ.எல்.எம்.றியால் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் எஸ்.எல்.ஏ.ஹமீட், பழைய மாணவர் சங்க செயலாளர் எம்.ஐ.எம்.ஜிப்ரி, அக்ஸான் இன்ஜினியரிங் வேக்ஸின் பணிப்பாளர் கே.எல்.எம்.அர்ஸாத், பழைய மாணவர்கள் சார்பாக எஸ்.என் ஹஸ்மி, எஸ்.எல்.தன்சில், யூ.கே.லாபிர், எஸ்.எம்.ஹர்னி உட்பட நலன்விரும்பிகள் பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டனர்.


No comments: