News Just In

6/13/2023 10:32:00 AM

தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவியிலிருந்து விலகியுள்ளார்!.



தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அநுர மனதுங்க, பதவியிலிருந்து விலகியுள்ளார்.

தனது பதவி விலகல் கடிதத்தை விடயதானத்திற்கு பொறுப்பான புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளரிடம் அவர் நேற்று (12.06.2023) கையளித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகள் குறித்த பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆத்திரமடைந்ததால் ஏற்பட்ட சர்ச்சைக்குரிய வாதப்பிரதிவாதங்கள் தொடர்பில் நேற்று வெளியான காணொளியை அடுத்தே இந்த பதவி விலகல் இடம்பெற்றுள்ளது.

No comments: