News Just In

5/15/2023 11:49:00 AM

திருகோணமலையில் தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் முப்படையினரையும் மீறி நுழைந்த தேரர்கள் குழு : சமய நிகழ்வுகளும் அனுஷ்டிப்பு !




திருகோணமலை நெல்சன் திரையரங்குக்கு முன்னால் தொல்லியல் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட இடத்தில் தாய்லாந்தில் இருந்து வருகை தரும் பௌத்த தேரர்களின் உபசம்பதா நிகழ்வுக்காக பிரீத் ஓதும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த நிகழ்வானது இன நல்லிணக்கத்தை சீர்குலைத்துவிடும் என்ற காரணத்தினால் இச்சமய நிகழ்வுகளுக்காக தெரிவுசெய்யப்பட்டிருந்த இடத்தில் நிகழ்வுகளை நடத்த குறித்த மாவட்ட அரசாங்க அதிபரினால் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதனால், நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) இத்தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து சில பௌத்த தேரர்களும் சிங்கள மக்களும் திருகோணமலை, மணிக்கூட்டு கோபுரத்தில் இருந்து சமய நிகழ்வினை அனுஷ்டித்தவாறு தடைவிதிக்கப்பட்ட பகுதிக்குள் முப்படையினரின் பாதுகாப்பையும் மீறி வலுக்கட்டாயமாக நுழைந்து, தமது சமய நிகழ்வுகளை தொடர்ந்து முன்னெடுத்திருந்தனர்.










No comments: