News Just In

5/30/2023 01:16:00 PM

கணவரின் வெற்றியைப் பார்த்து ஆனந்த கண்ணீர் சிந்திய ஜடேஜாவின் மனைவி!




ஐபிஎல் இறுதிப் போட்டியில் ரவீந்திர ஜடேஜா பவுண்டரியை விளாசி வெற்றிபெற வைத்தபோது, அவரது மனைவி ஆனந்த கண்ணீர் சிந்திய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

நேற்று நடந்த ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப்போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

ஐந்தாவது முறையாக CSK அணி கோப்பையை கைப்பற்றியதை ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு கடைசி 2 பந்துகளில் 10 ஓட்டங்கள் தேவைப்பட்டபோது, ரவீந்திர ஜடேஜா ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாசி மைதானத்தை அலற வைத்தார்

அவர் பவுண்டரி அடித்த தருணத்தில் தோனி உட்பட சக அணி வீரர்களும் ஆர்ப்பரித்த நிலையில், இரண்டு கண்கள் மட்டும் ஆனந்த கண்ணீர் சிந்தியது.

அது ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜடேஜாவுக்கு சொந்தமானது. பின்னர் அவர் மைதானத்தில் ஜடேஜாவை கட்டிப்பிடித்து அழுதது பார்வையாளர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

கணவரின் வெற்றியைப் பார்த்து அவர் பெருமிதத்தில் கண்ணீர் சிந்திய வீடியோ தற்போது இணைத்தில் வைரலாகியுள்ளது.

No comments: