News Just In

5/04/2023 07:53:00 AM

மணவர்களை வரவேற்றலும், புத்தாக்க ஆய்வுகூடம் திறப்பு விழாவும்!

வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் தரம் 6ற்கான புதிய மணவர்களை வரவேற்றலும், புத்தாக்க ஆய்வுகூடம் திறப்பு விழாவும் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை அதிபர் ஏ.எம்.எம்.தாஹிர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பணிப்பாளர் எஸ்.எம்.எம்.அமீர், உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.எம்.அஜ்மீர், ஓட்டமாவடி கோட்டக் கல்விக் பணிப்பாளர் எம்.ஐ.அஹ்சாப், பாடசாலை அபிவிருத்திக்குழு செயலாளரும், விஞ்ஞான அபிவிருத்திக்குழு தலைவருமான எம்.எஸ்.எம்.அன்வர், பழைய மாணவர் சங்க செயலாளர் எம்.ஐ.எம்.பயாஸ், பிரதேச பாடசாலை அதிபர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் கல்வி அமைச்சின் சுற்று நிருபத்திற்கமைய தரம் 6ற்கான புதிய மணவர்களை வரவேற்கும் நிகழ்வு இடம்பெற்றதுடன், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.

அத்தோடு பாடசாலையில் புத்தாக்க ஆய்வுகூடம் (ஐnழெஎயவழைn டுயடிழசயவழசல) மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பணிப்பாளர் எஸ்.எம்.எம்.அமீர் உட்பட அதிதிகளால் திறந்து வைக்கப்பட்டது.

எஸ்.எம்.எம்.மமுர்ஷித்








No comments: