News Just In

5/26/2023 11:16:00 AM

இலங்கையிலுள்ள சிங்கள மக்களுக்கு நாடாளுமன்றத்திலிருந்து வந்த செய்தி!



பௌத்தத்திற்கு பாதிப்பு என்று கூறிக்கொண்டு ஒரு தரப்பினர் பிரச்சாரம் செய்வதற்கு சிங்கள மக்கள் ஏமாந்துவிடக் கூடாது, வரலாற்றில் சிங்களவர்கள் ஏமாற்றமடைந்தது போதும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராணுவத்தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அறிவிப்பொன்றை வழங்கியுள்ளார்.

ஊழல் அரசியல்வாதிகளை இல்லாதொழிக்க மக்கள் புரட்சி வெடிக்க வேண்டும், அதற்காக நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் வைத்து நேற்றைய தினம் (25.05.2023) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

No comments: