News Just In

5/23/2023 03:38:00 PM

அலி சப்ரி ரஹீம் தங்கத்துடன் கைது: விசாரணை நடத்துமாறு ஹர்ஷன ராஜகருணா கோ ரிக்கை!




புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், தங்கத்துடன் கைது செய்யப்பட்டுள்ளதாக வௌியாகியுள்ள விடயம் குறித்து சுயாதீன விசாரணையை மேற்கொள்ளுமாறு, பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

மூன்றரை கிலோகிராம் தங்கத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணை மேற்கொள்ளுமாறும், இதனை அரசியலாக்க வேண்டாம் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணாவின் கோரிக்கைக்கு அமைய, குறித்த சம்பவம் தொடர்பில் பக்கசார்பற்ற விசாரணை மேற்கொண்டு, உரிய சட்டங்களின் பிரகாரம் தண்டனை வழங்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேனவும் கோரிக்கை முன்வைத்துள்ளார்

No comments: