News Just In

5/21/2023 06:34:00 PM

பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் பாடசாலை மாணவன் காயம்! கம்பளையில் சம்பவம்




கம்பளை - அபதெனிய பகுதியில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 19 வயது பாடசாலை மாணவரொருவர் காயமடைந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் வீட்டிலிருந்த செல்லப்பிராணி கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

சட்டவிரோதமாக மதுபானம் வைத்திருப்பதாக கிடைத்த தகவலுக்கமைய, குறித்த வீட்டை சோதனையிடுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

சுற்றிவளைப்பின் போது வீட்டிலிருந்த செல்லப்பிராணி பொலிஸ் உத்தியோகத்தர்களை கடிப்பதற்கு முற்பட்டுள்ளது.

இதன்போது ​​அதனை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் வானை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்த நிலையில், 2 பொலிஸ் உத்தியோகத்தர்களை செல்லப்பிராணி கடித்துள்ளது.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் செல்லப்பிராணி உயிரிழந்துள்ளதுடன் அருகிலிருந்த பாடசாலை மாணவனுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பாடசாலை மாணவனும் செல்லப்பிராணி கடித்ததில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்களும் கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments: