News Just In

4/30/2023 08:47:00 AM

கட்டுநாயக்காவில் கைதான கொலையாளி!

அம்பலாங்கொடை ஹிரேவத்த பிரதேசத்தில் ஒன்றாக உணவருந்திய தனது நண்பரை கத்தியால் குத்தி கொன்றதாக கூறப்படும் நபர் இரண்டு நாட்கள் தலைமறைவாக இருந்த பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக அம்பலாங்கொடை காவல்துறையினர் தெரிவித்தனர்.

இது தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் கட்டுப்பாட்டாளருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, சந்தேகநபர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முடியாமல் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பலாங்கொட ஹிரேவத்தையைச் சேர்ந்த ஆர்.ஜே.ரொஷான் குமார என்ற நாற்பத்திரண்டு வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே சந்தேக நபரால் கொல்லப்பட்டுள்ளார்.

அம்பலாங்கொட தர்மாசோக மற்றும் தேவானன் வித்தியாலயங்கள் இரண்டினதும் வருடாந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த போது மது அருந்திக் கொண்டிருந்த வேளை அவர்களுக்கு இடையில் இடம்பெற்ற உரையாடல் மிகவும் பார தூரமாக சென்றதை அடுத்து இந்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

No comments: