News Just In

4/23/2023 03:55:00 PM

மே மாதம் வரை தொடரும் வெப்பம்! இலங்கையர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

நாட்டில் நீர் பாவனை 10 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றம் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் அதிக வெப்பம் காரணமாக இவ்வாறு நீர் பாவனை அதிகரித்துள்ளதாக சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பொறியியலாளர் என்.யு.கே ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் விநியோகிக்கப்படும் நீரை வீட்டுத் தேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தற்போது நிலவும் அதிக வெப்பம் மே மாதம் இறுதி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

No comments: