News Just In

4/12/2023 04:06:00 PM

ஐ.எம்.எப் கடன் குறித்து 25-ம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதம் – ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்!




சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொடர்பாக 25ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கு ஆதரவை வழங்குவதா இல்லையா என அரசியல் கட்சிகள் தீர்மானிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பொருளாதார மீட்சி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான கட்டமைப்பு சீர்திருத்த வேலைத்திட்டத்தில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த வேலைத்திட்டத்தில் நிதி மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் மாத்திரம் இல்லாமல் அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க செயல்முறை போன்ற விடயங்களும் இதில் அடங்கும் என குறிப்பிட்டுள்ளார்

No comments: