News Just In

3/27/2023 10:44:00 AM

வெடுக்குநாறி மலையில் ஆதிலிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்!






வவுனியா – வெடுக்குநாறி மலையில் பிரதிஸ்டை செய்யப்பட்ட ஆதிலிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டித்து யாழ்ப்பாணத்தில் சைவ அமைப்புக்கள் போராட்டத்தில் ஈடுபட்டன.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.30 மணியளவில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்துக்கு அருகில் ஒன்று கூடிய சைவ அமைப்பின் பிரதிநிதிகள் குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தன.

இதன் போது வெடுக்குநாரி எங்கள் சொத்து, வெடுக்குநாரியில் உடைத்த ஆதிலிங்கத்தை மீள பிரதிஸ்டை செய், வெடுக்குநாரியில் ஆதிலிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டிக்கிறோம் போன்ற கோஷங்கள் இதன்போது எழுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: