கொழும்பின் சில பகுதிகளில் அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக இன்றையதினம் 18 மணித்தியாலங்களுக்கு நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
இந்த விடயம் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று இரவு 10 மணிமுதல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணிவரையில் நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கொழும்பு 01, 02, 03, 04, 07, 09, 10 மற்றும் 11 ஆகிய பகுதிகளில் நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
No comments: