News Just In

1/07/2023 07:38:00 AM

இலங்கையின் தலைநகரில் வசிக்கும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

கொழும்பின் சில பகுதிகளில் அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக இன்றையதினம் 18 மணித்தியாலங்களுக்கு நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த விடயம் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று இரவு 10 மணிமுதல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணிவரையில் நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கொழும்பு 01, 02, 03, 04, 07, 09, 10 மற்றும் 11 ஆகிய பகுதிகளில் நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

No comments: