News Just In

12/29/2022 12:06:00 PM

முதலையால் இழுத்துச் செல்லப்பட்டவர் சடலமாக மீட்பு!




மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிஓடை வண்ணாத்தி ஆற்றில் மீன்பிடிக்க சென்ற போது முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட நபரின் சடலம் நேற்று (28) மாலை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தம்பாலம்வெளி கொடுவாமடு பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய சதாசிவம் சிவபாபு என்பவரே இவ்வாறு சடலமாக மீட்டகப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வண்ணாத்தி ஆற்றில் மீன்பிடிப்பதற்காக கடந்த 26ம் திகதி பகல் இறங்கிய போது அவரை முதலை இழுத்துச் சென்று காணாமல் போயிருந்தார்.

இதனையடுத்து அம்பாறை ஒலுவில் கடற்படையினரின் உதவியுடன் பொலிசார் ஆற்றில் காணாமல் போனவரை தேடி வந்த நிலையில் முதலையால் கை கால்கள் கடிக்கப்பட்ட நிலையில் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது.

பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

No comments: