அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவரை பாலியல் வன்முறை குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள இலங்கை வீரர் தனுஸ்க குணதிலக தற்போது தங்கியுள்ள வீட்டிலிருந்து வேறு வீட்டிற்கு மாறுவதற்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் அனுமதிவழங்கியுள்ளது.
அதன்படி 31வயது இலங்கை வீரர் இன்று சிட்னி டவுனிங் சென்டர் உள்ளுர் நீதிமன்றத்தில் ஆஜரான வேளை தற்போது தங்கியுள்ள இடத்திலிருந்து வேறு வீட்டிற்கு மாறுவதற்கான அனுமதியை கோரினார்.
நீதிமன்ற நடவடிக்கைகள் நீண்டகாலம் நீடிக்ககூடியவை என்பதால் தனுஸ்க குணதிலக இந்த வேண்டுகோளை விடுத்தார்.
இந்நிலையில் தற்போது தனது ஆதரவாளர் ஒருவருடன் தங்கியுள்ள தனுஸ்ககுணதில தான் தனியாக தங்கியிருப்பதற்கு அனுமதிக்கும் விதத்தில் பிணைநிபந்தனைகள் மாற்றப்படவேண்டும் என வேண்டுகோள்விடுத்தார்.
No comments: