News Just In

9/16/2022 06:25:00 AM

இலங்கைக் கடல் எல்லைக்குள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மூன்று கப்பலகள்!

இலங்கை கடல் எல்லைக்குள் மூன்று கப்பல்கள் தடுத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதில், இரு டீசல் கப்பல்களும், ஒரு மசகு எண்ணெய் ஏற்றிவந்த கப்பலும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

குறித்த கப்பல்களுக்கு பணம் செலுத்தப்படவில்லை என்பதால், கடல் எல்லைக்குள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த மூன்று கப்பல்களுக்குமான முழுமையான பணத்தை செலுத்தினால் மாத்திரமே கப்பல்களில் இருந்தும் எரிபொருளை இறக்க முடியும் எனவும் தெரியவருகிறது.

இதேவேளை இந்த கப்பல்களில் விமானங்களுக்கு தேவையான எரிபொருளும் இருப்பதாக கூறப்படுகிறது.

No comments: