News Just In

9/18/2022 10:24:00 PM

மட்டக்களப்பில் பிரசித்தி பெற்ற . தூய கப்பலேந்தி அன்னை ஆலயத்தின் வருடாந்த பெருவிழா கொடிஇறக்கத்துடன் நிறைவுபெற்றது





. (மொகமட் தஸ்ரிப் லத்தீப்)

மட்டக்களப்பில் பிரசித்திபெற்ற முகத்துவாரம் தூய கப்பலேந்தி மாதா . அன்னை ஆலயத்தின் 214 வது வருடாந்த பெருவிழா இன்று கொடி இறக்கத்துடன் நிறைவு பெற்றது.

இவ்வாலயத்தின்பெருவிழா இறுதி நாளை முன்னிட்டு மட்டக்களப்பு மறை மாநில ஆயர் அதிவணக்கத்துக்குரிய அருட் கலாநிதி ஜோசப் பொன்னையா வினால் இன்று .பெருவிழா கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்.டு.கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெற்றது.

கடந்த 9 ஆம் திகதி மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான .இவ்வாலயத்தில் வருடாந்தப் பெருவிழா இவ்வாலயத்தின் பங்குத்தந்தை வணக்கத்திற்குரிய இன்னாசி யோசப் அடிகளார் தலைமையில் நவநாட் கிரியைகள் நடாத்தப்பட்டு பெருவிழாவின் விசேட நிகழ்வான தூய கப்பலேந்தி மாதாவின் திருவுருவ பவனி நேற்று மாலை இடம்பெற்றது .

.இப் பெருவிழா கூட்டுத் திருப்பலியில் நாட்டில் பொருளாதார நெருக்கடி நீங்கவும் அமைதி சமாதானம் இனங்களுக்கிடையில் நல்லுறவு வேண்டியும் விசேட பிரார்த்தனை வழிபாடுகள் நடத்தப்பட்டன.

இந்த ஆலயத்தின் பெருவிழா இறுதி நாள்நிகழ்வு களில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த கத்தோலிக்க அடியார்கள் பெருமளவில் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.


No comments: