News Just In

9/14/2022 09:29:00 PM

சூடு பிடிக்கும் தென்னிலங்கை அரசியல் - மூன்று ஜனாதிபதிகள் ஒன்றிணையும் புதிய கூட்டணி





ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் சந்திரிகா குமாரதுங்க தலைமையில் புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டணி தொடர்பில் ஆரம்பக்கட்ட கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாக தென்னிலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசிய கட்சியை மேலும் விரிவுபடுத்தும் நோக்கிலேயே இந்த திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய கூட்டணியில் இணைவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பெருந்தோட்ட அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளின் சில பகுதிகள் தயாராக இருப்பதாக தெரியவந்துள்ளது.

No comments: