கல்குடா யங் ஸ்டார் விளையாட்டு கழகத்தினால் நாடாத்திய முப்பெரும் விழா கிரான் பொத்தானை பிரதேசத்தில் இடம்பெற்றது.
கழக தலைவர் ஐ.எம்.றிஸ்மின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் உறுப்பினர்கள் அறிமுகம், சமுக சேவையாளர்கள் கௌரவிப்பு, பிரதேச ஊடகவியளார்கள் ளௌரவிப்பு என முப்பெரும் விழாவாக இடம்பெற்றது.
இதன்போது ஓட்டமாவடி மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள ஊடவியலாளர்களும் சமுக சேவையாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் சட்டத்தரணி ஹபீப் றிபான், ஓட்டமாவடி பிரதேச செயலக பிரதி திட்டப் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், ஓட்டமாவடி வர்த்தக சங்க தலைவர் எம்.ஏ.சி.எம்.நியாஸ், சமுக செயற்பாட்டாளர் வி.கமலதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
எஸ்.எம்.எம்.முர்ஷித்
No comments: