தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காண்பதில் சரியான விடயத்தை செய்வார்கள் என அரசியல் தலைவர்களை எவ்வளவு தூரம் நம்புகின்றீர்கள் என கேட்கப்பட்டமைக்கு மக்கள் அனுரகுமார திசநாயக்க(48.5) மீது அதிகளவான நம்பிக்கையை வெளியிட்டுள்ளனர் என மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் தெரிவித்துள்ளது.
ஜேவிபி தலைவரிற்கு அடுத்தபடியாக ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க மீதும்(36.8) எதிர்கட்சி தலைவர் மீதும்(29.1) மீதும் மக்கள் அதிக நம்பிக்கையை வெளியிட்டுள்ளனர் எனவும் மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் தெரிவித்துள்ளது.
அனைத்து சமூகத்தை சேர்ந்த மக்களும் அனுரகுமார திசநாயக்க மீது அதிகளவு நம்பிக்கையை வெளியிட்டுள்ளனர் சிங்களவர்கள் முஸ்லீம்களை விட தமிழர்களும் மலையகதமிழர்களும் ரணில்விக்கிரமசிங்கவிற்கு அதிக ஆதரவை வெளியிட்டுள்ளனர் என மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் தெரிவித்துள்ளது.
No comments: