- ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள திக்கோடை கிராமத்தில்ஞாயிற்றுக்கிழமை (21.08.2022) கறவைப் பசு தாக்கியதில் வயோதிபர் ஒருவர் பலியானதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுதாவளையைச் சேர்ந்த 69 வயதுடைய நாகமணி பாக்கியராசா என்பவரே இவ் விபத்தில் பலியானவராவார்.
சம்பவ தினத்தன்று வழமைபோன்று 15 நாட்கள் கன்று ஈன்ற தனது மாட்டில் பால் கறந்து கொண்டிருக்கும் போது மாடு திடீரென நெஞ்சுப் பகுதியில் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததார பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வருகிறது
களுவாஞ்சிகுடி நீதிமன்ற பதில் நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்ப இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தினை பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனையின் பின்னர் சடலத்தை நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
இச் சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments: