News Just In

7/26/2022 11:03:00 AM

நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொவிட் மரணங்கள் !மக்களே எச்சரிக்கை !




நாட்டில் மீண்டும் கொவிட் மரணங்கள் அதிகரித்து வருவதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள தரவுகள் வெளிக்காட்டுகின்றன.

அதன்படி நேற்று திங்கட்கிழமை (25) சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கடந்த 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 2 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.

60 வயதிற்கு மேற்பட்ட ஆண் ஒருவரும் பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, நேற்று திங்கட்கிழமை மாத்திரம் 75 புதிய கொவிட் தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நாட்டின் தற்போதைய கொவிட்-19 பரவலை கருத்திற்கொண்டு மீண்டும் முகக்கவசங்களை அணியுமாறு சுகாதார அமைச்சு கடுமையாக பரிந்துரையை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




No comments: