நாட்டில் மீண்டும் கொவிட் மரணங்கள் அதிகரித்து வருவதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள தரவுகள் வெளிக்காட்டுகின்றன.
அதன்படி நேற்று திங்கட்கிழமை (25) சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கடந்த 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 2 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.
60 வயதிற்கு மேற்பட்ட ஆண் ஒருவரும் பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, நேற்று திங்கட்கிழமை மாத்திரம் 75 புதிய கொவிட் தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நாட்டின் தற்போதைய கொவிட்-19 பரவலை கருத்திற்கொண்டு மீண்டும் முகக்கவசங்களை அணியுமாறு சுகாதார அமைச்சு கடுமையாக பரிந்துரையை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: