VTN News
  • முகப்பு
  • உள்ளூர்
  • உலகம்
  • ஆன்மீகம்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • கட்டுரை
  • காணொளி

News Just In

7/09/2022 02:40:00 PM

Home / உள்ளூர் / ஜனாதிபதி தனது இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்- ஏஎவ்பி செய்தி !

ஜனாதிபதி தனது இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்- ஏஎவ்பி செய்தி !

on 7/09/2022 02:40:00 PM

ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து தப்பியோடியுள்ளார் என பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏஎவ்பி தெரிவித்துள்ளது

ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் நுழைந்துள்ள நிலையிலேயே ஜனாதிபதி அங்கிருந்து வெளியேறியுள்ளார் என ஏவ்பி பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி பாதுகாப்பாக அழைத்துச்செல்லப்பட்டார் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சீற்றத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றுவதை தடுப்பதற்காக படையினர் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் எனவும் அவை குறிப்பிட்டுள்ளன.

கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரின் பாதுகாப்பு தடைகளை தகர்த்துக்கொண்டு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்தை நோக்கி முன்னேறினர்.

இலங்கை கொடி மற்றும் ஹெல்மெட்டுகளுடன் சில ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்தனர்.

ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அறைகள் வராந்தக்களில் காணப்படுவதையும் ஜனாதிபதிக்கு எதிராக கோசமிடுவதையும் முகநூல் நேரலைகள் காண்பித்துள்ளன.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காணப்படுகின்றனர் – பொலிஸாரும் படையினரும் அப்பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் காரணமாக 21 பேர் காயமடைந்த நிலையி;ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதித் தடைகளை தகர்த்தெறிந்து ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலை அடைந்தனர்.இதேவேளை ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையில் போடப்பட்ட பொலிஸ் வீதித்தடைகளை தகர்த்தெறிந்து சென்ற வேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைத்து தடுப்பு வேலிகளையும் உடைத்தெறிந்து ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலை அடைந்தனர்.

மூன்று தடைகளை தாண்டி கண்ணீர்ப்புகை நீர்த்தாரை பிரயோகங்களை எதிர்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் சதாம் வீதி வழியாக ஜனாதிபதி மாளிகையின் பிரதான வாயிலை சென்றடைந்தனர்

Share



at 7/09/2022 02:40:00 PM
Tags: உள்ளூர்

No comments:

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

தமிழ்-தரம் 05

  • தமிழ்-பாகம்-01
  • தமிழ்-பாகம்-02
  • தமிழ்-பாகம்-03
  • தமிழ்-பாகம்-04
  • தமிழ்-பாகம்-05
  • தமிழ்-பாகம்-06

சுற்றாடல்-தரம் 05

  • சுற்றாடல்-பாகம்-01
  • சுற்றாடல்-பாகம்-02
  • சுற்றாடல்-பாகம்-03
  • சுற்றாடல்-பாகம்-04

கணிதம்-தரம் 05

  • கணிதம்-பாகம்-01
  • கணிதம்-பாகம்-02
  • கணிதம்-பாகம்-03
  • கணிதம்-பாகம்-04
  • கணிதம்-பாகம்-05
  • கணிதம்-பாகம்-06

நுண்ணறிவு-தரம் 05

  • நுண்ணறிவு-பாகம்-01
  • நுண்ணறிவு-பாகம்-02
  • நுண்ணறிவு-பாகம்-03

செய்திகளைத் தேட

செய்திகளைப் பெற

Like

Follow

Subscribe

அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  • மட்டக்களப்பு- வாழைச்சேனையில் 2020 ம் ஆண்டு இளம்பரிதி நூல் வெளியீடும் கலைஞர் விபரத்திரட்டும்!!
    கோறளைப்பற்று (வாழைச்சேனை) பிரதேச செயலக கலாசார பிரிவு 2020 ம் ஆண்டு பிரதேச செயலக கலாசார பேரவையின் 2020 ம் ஆண்டு விழா மலராக கலைஞர்கள் விபரத்தி...
  • மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்கம் (EDS) நடாத்தும் சதுரங்கம் மற்றும் கரம் விளையாட்டு சுற்றுப்போட்டி!
    மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்கம் (EDS) நடாத்தும் சதுரங்கம் மற்றும் கரம் விளையாட்டு சுற்றுப்போட்டி மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங...
  • ஆசானுக்கு நாட்டியமே இறுதி மரியாதை! மட்டக்களப்பில் நெகிழ்ச்சி சம்பவம்
    ஆசானுக்கு நாட்டியமே இறுதி மரியாதை! மட்டக்களப்பில் நெகிழ்ச்சி சம்பவம் இலங்கையின் புகழ்பெற்ற நடன ஆசிரியரும் கலாபூசணம், பரதசூடாமணி பட்டம் பெற்ற...
  • இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட 500 பேர் தொடர்பில் வெளிவந்திருக்கும் தகவல்கள்..!
    இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட 500 பேர் தொடர்பில் வெளிவந்திருக்கும் தகவல்கள்..! தமிழீழத்திற்கான இறுதி போரில் இராணுவத்தில் சரணடைந்த 500 பேர் த...
  • திருகோணமலையில் சட்டவிரோத கட்டடங்கள் அகற்றம் – நீதிமன்ற உத்தரவின் பேரில் நடவடிக்கை
    திருகோணமலையில் சட்டவிரோத கட்டடங்கள் அகற்றம் – நீதிமன்ற உத்தரவின் பேரில்  நடவடிக்கை  திருகோணமலை உட்துறைமுக வீதியில் மீன்பிடி படகுத்துறை பகுதி...
  • செம்மணி மனிதப் புதைகுழி குறித்து தனியான ஆய்வு நடத்தப்பட வேண்டும்- ஐரோப்பியத் தூதுவர்களிடம் தமிழ்க் கட்சிகள் வலியுறுத்து
    செம்மணி மனிதப் புதைகுழி குறித்து தனியான ஆய்வு நடத்தப்பட வேண்டும்- ஐரோப்பியத் தூதுவர்களிடம் தமிழ்க் கட்சிகள் வலியுறுத்து யாழ்ப்பாணம் - செம்மண...
  • கால்கள் மடித்து அமர்ந்திருக்கும் எலும்புக்கூடு: தனியாக ஆராய்வு நடத்த முடிவு
    கால்கள் மடித்து அமர்ந்திருக்கும் எலும்புக்கூடு: தனியாக ஆராய்வு நடத்த முடிவு செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைகுழியில் கால்கள் மடித்து செங்க...
  • செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய பாறை 4.3 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனை
    செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய பாறை 4.3 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனை பூமியில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின...
  • ஹோமாகம கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து !
    ஹோமாகம கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து  தலைக்கவச உற்பத்தி தொழிற்சாலை ஒன்றிலேயே இன்று (21) காலை இந்த த...
  • கிழக்கு மாகாண தைக்வாண்டோ போட்டியில் கல்முனை சாஹிரா கல்லூரி ஒட்டுமொத்த ஆண்கள் சாம்பியன்
    கிழக்கு மாகாண தைக்வாண்டோ போட்டியில் கல்முனை சாஹிரா கல்லூரி ஒட்டுமொத்த ஆண்கள் சாம்பியன் நூருல் ஹுதா உமர் மட்டக்களப்பு வெபர் உள்ளக விளையாட்டரங...

Total Page Views

Facebook

அண்மைய செய்திகள்

செய்திக் காப்பகம்

Copyright © VTN News