VTN News
  • முகப்பு
  • உள்ளூர்
  • உலகம்
  • ஆன்மீகம்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • கட்டுரை
  • காணொளி

News Just In

7/09/2022 02:40:00 PM

Home / உள்ளூர் / ஜனாதிபதி தனது இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்- ஏஎவ்பி செய்தி !

ஜனாதிபதி தனது இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்- ஏஎவ்பி செய்தி !

on 7/09/2022 02:40:00 PM

ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து தப்பியோடியுள்ளார் என பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏஎவ்பி தெரிவித்துள்ளது

ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் நுழைந்துள்ள நிலையிலேயே ஜனாதிபதி அங்கிருந்து வெளியேறியுள்ளார் என ஏவ்பி பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி பாதுகாப்பாக அழைத்துச்செல்லப்பட்டார் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சீற்றத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றுவதை தடுப்பதற்காக படையினர் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் எனவும் அவை குறிப்பிட்டுள்ளன.

கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரின் பாதுகாப்பு தடைகளை தகர்த்துக்கொண்டு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்தை நோக்கி முன்னேறினர்.

இலங்கை கொடி மற்றும் ஹெல்மெட்டுகளுடன் சில ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்தனர்.

ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அறைகள் வராந்தக்களில் காணப்படுவதையும் ஜனாதிபதிக்கு எதிராக கோசமிடுவதையும் முகநூல் நேரலைகள் காண்பித்துள்ளன.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காணப்படுகின்றனர் – பொலிஸாரும் படையினரும் அப்பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் காரணமாக 21 பேர் காயமடைந்த நிலையி;ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதித் தடைகளை தகர்த்தெறிந்து ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலை அடைந்தனர்.இதேவேளை ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையில் போடப்பட்ட பொலிஸ் வீதித்தடைகளை தகர்த்தெறிந்து சென்ற வேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைத்து தடுப்பு வேலிகளையும் உடைத்தெறிந்து ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலை அடைந்தனர்.

மூன்று தடைகளை தாண்டி கண்ணீர்ப்புகை நீர்த்தாரை பிரயோகங்களை எதிர்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் சதாம் வீதி வழியாக ஜனாதிபதி மாளிகையின் பிரதான வாயிலை சென்றடைந்தனர்

Share



at 7/09/2022 02:40:00 PM
Tags: உள்ளூர்

No comments:

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

தமிழ்-தரம் 05

  • தமிழ்-பாகம்-01
  • தமிழ்-பாகம்-02
  • தமிழ்-பாகம்-03
  • தமிழ்-பாகம்-04
  • தமிழ்-பாகம்-05
  • தமிழ்-பாகம்-06

சுற்றாடல்-தரம் 05

  • சுற்றாடல்-பாகம்-01
  • சுற்றாடல்-பாகம்-02
  • சுற்றாடல்-பாகம்-03
  • சுற்றாடல்-பாகம்-04

கணிதம்-தரம் 05

  • கணிதம்-பாகம்-01
  • கணிதம்-பாகம்-02
  • கணிதம்-பாகம்-03
  • கணிதம்-பாகம்-04
  • கணிதம்-பாகம்-05
  • கணிதம்-பாகம்-06

நுண்ணறிவு-தரம் 05

  • நுண்ணறிவு-பாகம்-01
  • நுண்ணறிவு-பாகம்-02
  • நுண்ணறிவு-பாகம்-03

செய்திகளைத் தேட

செய்திகளைப் பெற

Like

Follow

Subscribe

அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  • 1940களில் ஒரே பாதையில் பயணித்த தமிழ்-பேசும் மக்கள் 1980களில் வேறு வேறு திசைகளில் சென்று இப்பொழுது பிளவு பட்டு நிற்பதற்கு அந்நிய சக்திகளின் சதி
    1940களில் ஒரே பாதையில் பயணித்த தமிழ்-பேசும் மக்கள் 1980களில் வேறு வேறு திசைகளில் சென்று இப்பொழுது பிளவு பட்டு நிற்பதற்கு அந்நிய சக்திகளின்சத...
  • சவூதி அரேபியாவில் தண்டனை ; சிவராசா அனோஜனை விடுவிக்க அரசாங்கத்திடம் வலியுறுத்து
    சவூதி அரேபியாவில் தண்டனை ; சிவராசா அனோஜனை விடுவிக்க அரசாங்கத்திடம் வலியுறுத்து மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத ஒன்றியம், சவூதி அரேபியாவில் தண்...
  • காத்தான்குடியில் தூண் இடிந்து பலியானமட்டக்களப்பு, ஜெயந்திபுர 28 வயது பட்டதாரி இளைஞன் !
    காத்தான்குடியில் தூண் இடிந்து பலியானமட்டக்களப்பு, ஜெயந்திபுர 28 வயது  பட்டதாரி இளைஞன் !  காத்தான்குடியில் கட்டுமானப் பணியின்போது தூண் இடிந்த...
  • ரிஷாட் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த தமிழ் சிறுமி தொடர்பில் பரபரப்பு வாக்குமூலம் - பல தகவல்கள் அம்பலம்
    ரிஷாட் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த தமிழ் சிறுமி தொடர்பில் பரபரப்பு வாக்குமூலம் - பல தகவல்கள் அம்பலம் கொழும்பு பௌத்தலோக மாவத்தையில் அ...
  • சமூக ஊடகத்தில் முஹம்மது நபி தொடர்பில் தவறாக பதிவிட்ட அனோஜனுக்கு சவூதியில் 5 ஆண்டுகள் சிறை, 3 மில்லியன் அபராதம்
    சமூக ஊடகத்தில் முஹம்மது நபி தொடர்பில் தவறாக பதிவிட்ட அனோஜனுக்கு சவூதியில் 5 ஆண்டுகள் சிறை, 3 மில்லியன் அபராதம் சவூதி அரேபியாவில் பணியாற்றி வ...
  • மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்கம் (EDS) நடாத்தும் சதுரங்கம் மற்றும் கரம் விளையாட்டு சுற்றுப்போட்டி!Application for Chess and Carom Competition
    மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்கம் (EDS) நடாத்தும் சதுரங்கம் மற்றும் கரம் விளையாட்டு சுற்றுப்போட்டி Application for Chess and Carom Com...
  • மட்டக்களப்பு மைலம்பாவெளி ஆலயத்திற்குள் நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்.. அன்னதான நிகழ்வில் பரபரப்பு
    மட்டக்களப்பு மைலம்பாவெளி ஆலயத்திற்குள் நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்.. அன்னதான நிகழ்வில் பரபரப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மைலம்பாவெளி விபுல...
  • மட்டக்களப்பு மாவட்டத்தில் சேதமடைந்த வீடுகளைத் திருத்துவதற்கு பயனாளிகளுக்கு 7.16 மில்லியன் பெறுமதியான காசோலைகள் வழங்கி வைப்பு
    மட்டக்களப்பு மாவட்டத்தில் சேதமடைந்த வீடுகளைத் திருத்துவதற்கு பயனாளிகளுக்கு 7.16 மில்லியன் பெறுமதியான காசோலைகள் வழங்கி வைப்பு (ஏ.எச்.ஏ. ஹுஸைன...
  • தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய தீர்த்தோற்சவம்.!
    தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய தீர்த்தோற்சவம். (ஏ.எச்.ஏ. ஹுஸைன்) கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்கதும், பக்தர்களால் "சின்னக் கதிர்கா...
  • திருகோவிலில் நடந்த விபத்தில் மட்டக்களப்பு வவுனதீவைச் சேர்ந்த பெண் பலி. சிறுவர்கள் உட்பட நால்வருக்கு காயம்
    திருகோவிலில் நடந்த விபத்தில் மட்டக்களப்பு  வவுனதீவைச்  சேர்ந்த பெண் பலி. சிறுவர்கள் உட்பட நால்வருக்கு காயம் அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில...

Total Page Views

Facebook

அண்மைய செய்திகள்

செய்திக் காப்பகம்

Copyright © VTN News