VTN News
  • முகப்பு
  • உள்ளூர்
  • உலகம்
  • ஆன்மீகம்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • கட்டுரை
  • காணொளி

News Just In

7/09/2022 02:40:00 PM

Home / உள்ளூர் / ஜனாதிபதி தனது இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்- ஏஎவ்பி செய்தி !

ஜனாதிபதி தனது இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்- ஏஎவ்பி செய்தி !

on 7/09/2022 02:40:00 PM

ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து தப்பியோடியுள்ளார் என பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏஎவ்பி தெரிவித்துள்ளது

ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் நுழைந்துள்ள நிலையிலேயே ஜனாதிபதி அங்கிருந்து வெளியேறியுள்ளார் என ஏவ்பி பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி பாதுகாப்பாக அழைத்துச்செல்லப்பட்டார் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சீற்றத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றுவதை தடுப்பதற்காக படையினர் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் எனவும் அவை குறிப்பிட்டுள்ளன.

கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரின் பாதுகாப்பு தடைகளை தகர்த்துக்கொண்டு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்தை நோக்கி முன்னேறினர்.

இலங்கை கொடி மற்றும் ஹெல்மெட்டுகளுடன் சில ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்தனர்.

ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அறைகள் வராந்தக்களில் காணப்படுவதையும் ஜனாதிபதிக்கு எதிராக கோசமிடுவதையும் முகநூல் நேரலைகள் காண்பித்துள்ளன.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காணப்படுகின்றனர் – பொலிஸாரும் படையினரும் அப்பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் காரணமாக 21 பேர் காயமடைந்த நிலையி;ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதித் தடைகளை தகர்த்தெறிந்து ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலை அடைந்தனர்.இதேவேளை ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையில் போடப்பட்ட பொலிஸ் வீதித்தடைகளை தகர்த்தெறிந்து சென்ற வேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைத்து தடுப்பு வேலிகளையும் உடைத்தெறிந்து ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலை அடைந்தனர்.

மூன்று தடைகளை தாண்டி கண்ணீர்ப்புகை நீர்த்தாரை பிரயோகங்களை எதிர்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் சதாம் வீதி வழியாக ஜனாதிபதி மாளிகையின் பிரதான வாயிலை சென்றடைந்தனர்

Share



at 7/09/2022 02:40:00 PM
Tags: உள்ளூர்

No comments:

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

தமிழ்-தரம் 05

  • தமிழ்-பாகம்-01
  • தமிழ்-பாகம்-02
  • தமிழ்-பாகம்-03
  • தமிழ்-பாகம்-04
  • தமிழ்-பாகம்-05
  • தமிழ்-பாகம்-06

சுற்றாடல்-தரம் 05

  • சுற்றாடல்-பாகம்-01
  • சுற்றாடல்-பாகம்-02
  • சுற்றாடல்-பாகம்-03
  • சுற்றாடல்-பாகம்-04

கணிதம்-தரம் 05

  • கணிதம்-பாகம்-01
  • கணிதம்-பாகம்-02
  • கணிதம்-பாகம்-03
  • கணிதம்-பாகம்-04
  • கணிதம்-பாகம்-05
  • கணிதம்-பாகம்-06

நுண்ணறிவு-தரம் 05

  • நுண்ணறிவு-பாகம்-01
  • நுண்ணறிவு-பாகம்-02
  • நுண்ணறிவு-பாகம்-03

செய்திகளைத் தேட

செய்திகளைப் பெற

Like

Follow

Subscribe

அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  • பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் சமத்துவமான, பாதுகாப்பான, மலர்ச்சியான, விரும்பத்தக்க உலகத்தை எப்படி உருவாக்கலாம்?
    பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் சமத்துவமான, பாதுகாப்பான, மலர்ச்சியான, விரும்பத்தக்க உலகத்தை எப்படி உருவாக்கலாம்? வழி சொல்கிறார் இளம் பெண் செய...
  • SAFE நிறுவனத்தால் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான உலர்உணவு பொதிகள் வழங்கிவைப்பு!
    SAFE நிறுவனத்தால் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான உலர்உணவு பொதிகள் வழங்கிவைப்பு! ஆரையம்பதி வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட...
  • மத்திய கிழக்கில் பதற்றநிலை: ஆட்டம்காணும் தங்கத்தின் விலை - ஒரே நாளில் ஏற்பட்ட மாற்றங்கள்
    மத்திய கிழக்கில் பதற்றநிலை: ஆட்டம்காணும் தங்கத்தின் விலை - ஒரே நாளில் ஏற்பட்ட மாற்றங்கள் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றநிலை காரணமாக இலங்...
  • போர் முடிவு தொடர்பான ட்ரம்பின் அறிவிப்பை அடுத்து திடீரென குறைந்த எரிபொருள் விலை
    போர் முடிவு தொடர்பான ட்ரம்பின் அறிவிப்பை அடுத்து திடீரென குறைந்த எரிபொருள் விலை ஆசிய சந்தைகளில் இன்று காலை வர்த்தக நடவடிக்கைகளின் தொடக்கத்தி...
  • வெடித்து சிதறும் ஈரானிய விமான நிலையம்! அதிகாலையிலேயே இஸ்ரேல் சரமாரி தாக்குதல்
    வெடித்து சிதறும் ஈரானிய விமான நிலையம்! அதிகாலையிலேயே இஸ்ரேல் சரமாரி தாக்குதல் ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது சனிக்கிழமை அதிகாலை வான்வழி தாக்குத...
  • சிங்கள இதயங்கள் தமிழ் முஸ்லிம் மக்களுக்காகவும் தமிழ் முஸ்லிம் இதயங்கள் சிங்கள மக்களுக்காகவும் கருணையுடன் திறந்திருக்கட்டும்
    சிங்கள இதயங்கள் தமிழ் முஸ்லிம் மக்களுக்காகவும் தமிழ் முஸ்லிம் இதயங்கள் சிங்கள மக்களுக்காகவும் கருணையுடன் திறந்திருக்கட்டும் . இளைஞர் விவகார ...
  • மட்டக்களப்பு வாகரை காரமுனையில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வு!
    மட்டக்களப்பு வாகரை காரமுனையில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வு! சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு, வாகரை காரமுனைப் பகுதியில...
  • மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு
    மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு மட்டக்களப்பு செங்கலடி - பதுளை வீதியில் சின்னப்புல்லுமலை கிராமத்தில் காட்டு யானை தா...
  • துபாய்க்கு இனி திரும்புவதாக இல்லை... வெளியேறத் தொடங்கியுள்ள வெளிநாட்டவர்கள்
    துபாய்க்கு இனி திரும்புவதாக இல்லை... வெளியேறத் தொடங்கியுள்ள வெளிநாட்டவர்கள் ஈரானில் இருந்து தொடர்ச்சியாக ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் முன...
  • சர்வதேச மகளிர் தினம் 2021- ஓர் பார்வை!!
    8-ம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. தாயாக, தாரமாக, அக்கா தங்கையாக, மகளாக, தோழியாக நம் உறவின் அனைத்து நிலையிலும...

Total Page Views

Facebook

அண்மைய செய்திகள்

செய்திக் காப்பகம்

Copyright © VTN News