VTN News
  • முகப்பு
  • உள்ளூர்
  • உலகம்
  • ஆன்மீகம்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • கட்டுரை
  • காணொளி

News Just In

7/09/2022 02:40:00 PM

Home / உள்ளூர் / ஜனாதிபதி தனது இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்- ஏஎவ்பி செய்தி !

ஜனாதிபதி தனது இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்- ஏஎவ்பி செய்தி !

on 7/09/2022 02:40:00 PM

ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து தப்பியோடியுள்ளார் என பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏஎவ்பி தெரிவித்துள்ளது

ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் நுழைந்துள்ள நிலையிலேயே ஜனாதிபதி அங்கிருந்து வெளியேறியுள்ளார் என ஏவ்பி பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி பாதுகாப்பாக அழைத்துச்செல்லப்பட்டார் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சீற்றத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றுவதை தடுப்பதற்காக படையினர் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் எனவும் அவை குறிப்பிட்டுள்ளன.

கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரின் பாதுகாப்பு தடைகளை தகர்த்துக்கொண்டு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்தை நோக்கி முன்னேறினர்.

இலங்கை கொடி மற்றும் ஹெல்மெட்டுகளுடன் சில ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்தனர்.

ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அறைகள் வராந்தக்களில் காணப்படுவதையும் ஜனாதிபதிக்கு எதிராக கோசமிடுவதையும் முகநூல் நேரலைகள் காண்பித்துள்ளன.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காணப்படுகின்றனர் – பொலிஸாரும் படையினரும் அப்பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் காரணமாக 21 பேர் காயமடைந்த நிலையி;ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதித் தடைகளை தகர்த்தெறிந்து ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலை அடைந்தனர்.இதேவேளை ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையில் போடப்பட்ட பொலிஸ் வீதித்தடைகளை தகர்த்தெறிந்து சென்ற வேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைத்து தடுப்பு வேலிகளையும் உடைத்தெறிந்து ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலை அடைந்தனர்.

மூன்று தடைகளை தாண்டி கண்ணீர்ப்புகை நீர்த்தாரை பிரயோகங்களை எதிர்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் சதாம் வீதி வழியாக ஜனாதிபதி மாளிகையின் பிரதான வாயிலை சென்றடைந்தனர்

Share



at 7/09/2022 02:40:00 PM
Tags: உள்ளூர்

No comments:

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

தமிழ்-தரம் 05

  • தமிழ்-பாகம்-01
  • தமிழ்-பாகம்-02
  • தமிழ்-பாகம்-03
  • தமிழ்-பாகம்-04
  • தமிழ்-பாகம்-05
  • தமிழ்-பாகம்-06

சுற்றாடல்-தரம் 05

  • சுற்றாடல்-பாகம்-01
  • சுற்றாடல்-பாகம்-02
  • சுற்றாடல்-பாகம்-03
  • சுற்றாடல்-பாகம்-04

கணிதம்-தரம் 05

  • கணிதம்-பாகம்-01
  • கணிதம்-பாகம்-02
  • கணிதம்-பாகம்-03
  • கணிதம்-பாகம்-04
  • கணிதம்-பாகம்-05
  • கணிதம்-பாகம்-06

நுண்ணறிவு-தரம் 05

  • நுண்ணறிவு-பாகம்-01
  • நுண்ணறிவு-பாகம்-02
  • நுண்ணறிவு-பாகம்-03

செய்திகளைத் தேட

செய்திகளைப் பெற

Like

Follow

Subscribe

அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  • தவறான பதிலுக்கு தண்டனையா? மாணவியை அறைந்த ஆசிரியர் மீது பொலிஸில் முறைப்பாடு!
    தவறான பதிலுக்கு தண்டனையா? மாணவியை அறைந்த ஆசிரியர் மீது பொலிஸில் முறைப்பாடு மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கு...
  • பலத்த மற்றும் அதிரடி பாதுகாப்புடன் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட 60 சிறைகைதிகள்..!
    பலத்த மற்றும் அதிரடி பாதுகாப்புடன் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட 60 சிறைகைதிகள்.. நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்...
  • கல்லடி பாலத்தில் பரபரப்பு; கழுத்தை அறுத்து உயிமாய்க்க முயன்ற நபர் மீட்பு
    கல்லடி பாலத்தில் பரபரப்பு; கழுத்தை அறுத்து உயிமாய்க்க முயன்ற நபர் மீட்பு மட்டக்களப்பு, கல்லடி பாலத்தில் தனது ஆடைகளை கழற்றிவிட்டு கழுத்தைத் த...
  • மட்டக்களப்பு நகரின் மத்தியில் பயங்கர தீ விபத்து - 5 வர்த்தக நிலையங்கள் தீக்கிரை.!
    மட்டக்களப்பு நகரின் மத்தியில் பயங்கர தீ விபத்து - 5 வர்த்தக நிலையங்கள் தீக்கிரை.! மட்டக்களப்பு நகர மத்தியிலுள்ள வர்த்தக நிலையங்கள் சிலவற்றில...
  • 'போதையை ஒழிக்கும் பாதையை வகுப்போம்' எனும் தொனிப்பொருளிலான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம்!
    வடமாகாண அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் யாழ்ப்பாண உளநல பிரிவு போதனா வைத்தியசாலை பிரிவு ஆகியன "போதையை ஒழிக்கும் பாதையை வகுப்போம்...
  • எரிபொருள் மீதான கட்டுப்பாடுகள் உடனடி நீக்கம்
    எரிபொருள் மீதான கட்டுப்பாடுகள் உடனடி  நீக்கம் எரிபொருள் நெருக்கடியைத் தொடர்ந்து பொதுச் செலவுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமைச்சர்கள், நாட...
  • வாரிசு அரசியல் இனி எடுபடாது; பழிவாங்கல் அல்ல, சட்டத்தின் முன் அனைவரும் சமம்!" – மஹிந்தவுக்கு பிமல், ஹந்துன்நெத்தி!
    வாரிசு அரசியல் இனி எடுபடாது; பழிவாங்கல் அல்ல, சட்டத்தின் முன் அனைவரும் சமம்!" – மஹிந்தவுக்கு பிமல், ஹந்துன்நெத்தி அதிரடிப் பதிலடி இலங்க...
  • ஐரோப்பிய நாடுகளில் கடும் வெப்ப அலை; மயங்கி விழுந்த மாணவர்கள்.. 1000 பாடசாலைகளுக்கு பூட்டு
    ஐரோப்பிய நாடுகளில் கடும் வெப்ப அலை; மயங்கி விழுந்த மாணவர்கள்.. 1000 பாடசாலைகளுக்கு பூட்டு ஐரோப்பிய நாடுகளில் இதுவரை இல்லாத அளவுக்குக் கோட...
  • மட்டக்களப்பில்உடைந்த பாலத்திற்கு மாற்றீடாக தற்காலிக பாலம் அமைத்து மக்கள் பாவனைக்காக இன்று காலை திறக்கப்பட்டுள்ளது.
    மட்டக்களப்பில்உடைந்த பாலத்திற்கு மாற்றீடாக தற்காலிக பாலம் அமைத்து மக்கள் பாவனைக்காக இன்று காலை திறக்கப்பட்டுள்ளது.   கந்தசாமி பிரபு MP அவர்க...
  • சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அதிநவீன கண் சிகிச்சை பிரிவு!
    சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அதிநவீன கண் சிகிச்சை பிரிவு! நூருல் ஹுதா உமர் கிழக்கு மாகாண மக்களின் நீண்டகாலத் தேவையை நிறைவு செய்யும் வகைய...

Total Page Views

Facebook

அண்மைய செய்திகள்

செய்திக் காப்பகம்

Copyright © VTN News