VTN News
  • முகப்பு
  • உள்ளூர்
  • உலகம்
  • ஆன்மீகம்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • கட்டுரை
  • காணொளி

News Just In

7/09/2022 02:40:00 PM

Home / உள்ளூர் / ஜனாதிபதி தனது இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்- ஏஎவ்பி செய்தி !

ஜனாதிபதி தனது இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்- ஏஎவ்பி செய்தி !

on 7/09/2022 02:40:00 PM

ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து தப்பியோடியுள்ளார் என பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏஎவ்பி தெரிவித்துள்ளது

ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் நுழைந்துள்ள நிலையிலேயே ஜனாதிபதி அங்கிருந்து வெளியேறியுள்ளார் என ஏவ்பி பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி பாதுகாப்பாக அழைத்துச்செல்லப்பட்டார் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சீற்றத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றுவதை தடுப்பதற்காக படையினர் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் எனவும் அவை குறிப்பிட்டுள்ளன.

கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரின் பாதுகாப்பு தடைகளை தகர்த்துக்கொண்டு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்தை நோக்கி முன்னேறினர்.

இலங்கை கொடி மற்றும் ஹெல்மெட்டுகளுடன் சில ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்தனர்.

ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அறைகள் வராந்தக்களில் காணப்படுவதையும் ஜனாதிபதிக்கு எதிராக கோசமிடுவதையும் முகநூல் நேரலைகள் காண்பித்துள்ளன.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காணப்படுகின்றனர் – பொலிஸாரும் படையினரும் அப்பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் காரணமாக 21 பேர் காயமடைந்த நிலையி;ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதித் தடைகளை தகர்த்தெறிந்து ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலை அடைந்தனர்.இதேவேளை ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையில் போடப்பட்ட பொலிஸ் வீதித்தடைகளை தகர்த்தெறிந்து சென்ற வேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைத்து தடுப்பு வேலிகளையும் உடைத்தெறிந்து ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலை அடைந்தனர்.

மூன்று தடைகளை தாண்டி கண்ணீர்ப்புகை நீர்த்தாரை பிரயோகங்களை எதிர்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் சதாம் வீதி வழியாக ஜனாதிபதி மாளிகையின் பிரதான வாயிலை சென்றடைந்தனர்

Share



at 7/09/2022 02:40:00 PM
Tags: உள்ளூர்

No comments:

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

தமிழ்-தரம் 05

  • தமிழ்-பாகம்-01
  • தமிழ்-பாகம்-02
  • தமிழ்-பாகம்-03
  • தமிழ்-பாகம்-04
  • தமிழ்-பாகம்-05
  • தமிழ்-பாகம்-06

சுற்றாடல்-தரம் 05

  • சுற்றாடல்-பாகம்-01
  • சுற்றாடல்-பாகம்-02
  • சுற்றாடல்-பாகம்-03
  • சுற்றாடல்-பாகம்-04

கணிதம்-தரம் 05

  • கணிதம்-பாகம்-01
  • கணிதம்-பாகம்-02
  • கணிதம்-பாகம்-03
  • கணிதம்-பாகம்-04
  • கணிதம்-பாகம்-05
  • கணிதம்-பாகம்-06

நுண்ணறிவு-தரம் 05

  • நுண்ணறிவு-பாகம்-01
  • நுண்ணறிவு-பாகம்-02
  • நுண்ணறிவு-பாகம்-03

செய்திகளைத் தேட

செய்திகளைப் பெற

Like

Follow

Subscribe

அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  • சிறுபான்மையின சமூகத்தின் மீது அடக்குமுறைகளைப் பிரயோகிப்பதற்கான நியாயங்களைத் தேடுவதை அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும்!!
    பொது இடங்களில் முகத்தை முழுமையாக மூடும் வகையிலான ஆடைகளை அணிவதற்குத் தடை விதிக்கும் யோசனை எந்தவொரு அடிப்படையுமற்றது. எனவே இந்த யோசனையை இலங்க...
  • 1000 பிக்குகளின் இரகசிய திட்டத்தை அறிந்த அநுர அரசு! தமிழர் பகுதியில் கைதுகள் தீவிரம்
    1000 பிக்குகளின் இரகசிய திட்டத்தை அறிந்த அநுர அரசு! தமிழர் பகுதியில் கைதுகள் தீவிரம் .. திருகோணமலை புத்தர் விவகாரத்தையடுத்து தற்போது மட்டக்க...
  • விபத்தில் சிக்கிய மணமகள் - மருத்துவமனையில் வைத்து தாலி கட்டிய மணமகன்
    விபத்தில் சிக்கிய மணமகள் - மருத்துவமனையில் வைத்து தாலி கட்டிய மணமகன் மணமகள் விபத்தில் சிக்கியதால், மருத்துவமனையில் வைத்து மணமகன் தாலி கட்டிய...
  • மாவீரர் பெற்றார் கௌரவிப்பு!
    மாவீரர்  பெற்றார் கௌரவிப்பு! மட்டக்களப்பு ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதேச மாவீரர்களின் பெற்றார்களை கௌரவிக்கும் நிகழ்வுஏறாவூர்பற்று பிரதே...
  • திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைத்த நபரை கைது செய்ய நடவடிக்கை
    திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைத்த நபரை கைது செய்ய நடவடிக்கை திருகோணமலையில் புத்தர் சிலையை வைத்த சம்பவத்தில் முக்கிய பங்கு வகி...
  • நாடு முழுவதும் கனமழை! இலங்கை மக்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு.
    நாடு முழுவதும் கனமழை! இலங்கை மக்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு. . நாடு முழுவதும் கனமழையைப் பெறும் வாய்ப்புள்ளதாக என யாழ்ப்பாணப் பல்கல...
  • மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் 40 ஆண்டுகள்கடூழிய சிறைதண்டனை விதிப்பு.!
    மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் 40 ஆண்டுகள் கடூழிய சிறைதண்டனை விதிப்பு.! தமது சொந்த மருமகளான 12 வயது சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்திய எ...
  • அநுர அரசில் இராணுவத்திற்கு காத்திருக்கும் அதிர்ச்சி! தப்ப முடியாத பொறிக்குள் பலர்
    அநுர அரசில் இராணுவத்திற்கு காத்திருக்கும் அதிர்ச்சி! தப்ப முடியாத பொறிக்குள் பலர் சமகால அநுர அரசாங்கத்தின் கீழ் பாதுகாப்புப் படைகளில் பணியாற...
  • மகிந்தவின் பேரணியில் பாரிய சத்தத்துடன் இயங்கிய ஒலிபெருக்கிகள்! பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை
    மகிந்தவின் பேரணியில் பாரிய சத்தத்துடன் இயங்கிய ஒலிபெருக்கிகள்! பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நுகேகொ...
  • தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்!
    தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கிழக்கு, வடமத்திய, ஊவா, தென் மாகாணங்களில் 100 மி.மீ. மழை வீழ்ச்சி - வளிமண்டலவியல...

Total Page Views

Facebook

அண்மைய செய்திகள்

செய்திக் காப்பகம்

Copyright © VTN News