VTN News
  • முகப்பு
  • உள்ளூர்
  • உலகம்
  • ஆன்மீகம்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • கட்டுரை
  • காணொளி

News Just In

7/09/2022 02:40:00 PM

Home / உள்ளூர் / ஜனாதிபதி தனது இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்- ஏஎவ்பி செய்தி !

ஜனாதிபதி தனது இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்- ஏஎவ்பி செய்தி !

on 7/09/2022 02:40:00 PM

ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து தப்பியோடியுள்ளார் என பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏஎவ்பி தெரிவித்துள்ளது

ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் நுழைந்துள்ள நிலையிலேயே ஜனாதிபதி அங்கிருந்து வெளியேறியுள்ளார் என ஏவ்பி பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி பாதுகாப்பாக அழைத்துச்செல்லப்பட்டார் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சீற்றத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றுவதை தடுப்பதற்காக படையினர் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் எனவும் அவை குறிப்பிட்டுள்ளன.

கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரின் பாதுகாப்பு தடைகளை தகர்த்துக்கொண்டு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்தை நோக்கி முன்னேறினர்.

இலங்கை கொடி மற்றும் ஹெல்மெட்டுகளுடன் சில ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்தனர்.

ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அறைகள் வராந்தக்களில் காணப்படுவதையும் ஜனாதிபதிக்கு எதிராக கோசமிடுவதையும் முகநூல் நேரலைகள் காண்பித்துள்ளன.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காணப்படுகின்றனர் – பொலிஸாரும் படையினரும் அப்பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் காரணமாக 21 பேர் காயமடைந்த நிலையி;ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதித் தடைகளை தகர்த்தெறிந்து ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலை அடைந்தனர்.இதேவேளை ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையில் போடப்பட்ட பொலிஸ் வீதித்தடைகளை தகர்த்தெறிந்து சென்ற வேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைத்து தடுப்பு வேலிகளையும் உடைத்தெறிந்து ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலை அடைந்தனர்.

மூன்று தடைகளை தாண்டி கண்ணீர்ப்புகை நீர்த்தாரை பிரயோகங்களை எதிர்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் சதாம் வீதி வழியாக ஜனாதிபதி மாளிகையின் பிரதான வாயிலை சென்றடைந்தனர்

Share



at 7/09/2022 02:40:00 PM
Tags: உள்ளூர்

No comments:

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

தமிழ்-தரம் 05

  • தமிழ்-பாகம்-01
  • தமிழ்-பாகம்-02
  • தமிழ்-பாகம்-03
  • தமிழ்-பாகம்-04
  • தமிழ்-பாகம்-05
  • தமிழ்-பாகம்-06

சுற்றாடல்-தரம் 05

  • சுற்றாடல்-பாகம்-01
  • சுற்றாடல்-பாகம்-02
  • சுற்றாடல்-பாகம்-03
  • சுற்றாடல்-பாகம்-04

கணிதம்-தரம் 05

  • கணிதம்-பாகம்-01
  • கணிதம்-பாகம்-02
  • கணிதம்-பாகம்-03
  • கணிதம்-பாகம்-04
  • கணிதம்-பாகம்-05
  • கணிதம்-பாகம்-06

நுண்ணறிவு-தரம் 05

  • நுண்ணறிவு-பாகம்-01
  • நுண்ணறிவு-பாகம்-02
  • நுண்ணறிவு-பாகம்-03

செய்திகளைத் தேட

செய்திகளைப் பெற

Like

Follow

Subscribe

அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  • பொத்துவில் 60ம் கட்டை கனகர் கிராம மக்களின் குடிநீர்ப்பிரச்சனைக்கு தீர்வு!
     பொத்துவில் 60ம் கட்டை கனகர் கிராம மக்களின் குடிநீர்ப்பிரச்சனைக்கு தீர்வு! 1990காலப்பகுதியில் நாட்டில் நிலவிய யுத்ததிலைகாரணமாக முற்றாக அழிக்...
  • அனைவரது கவனத்திற்கும் ஒரு முக்கிய அறிவிப்பு :
    அனைவரது கவனத்திற்கும் ஒரு முக்கிய அறிவிப்பு : வழக்கத்திற்கு மாறாக இவ்வாண்டுஆகஸ்ட் மாதம் வரை கடும் குளிர் நிலவும்....இன்று காலை 5:00 மணி முதல...
  • மீண்டும் ஆரம்பமாகும் பாடசாலைகள்! விடுமுறை குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு
    மீண்டும் ஆரம்பமாகும் பாடசாலைகள்! விடுமுறை குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு நாடளாவிய ரீதியில் உள்ள அரச பாடசாலைகள் நாளை (21) முதல் மீண்டும் ...
  • கொக்கட்டி சோலையில் மாட்டுப் பொங்கல் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.
    கொக்கட்டி சோலையில் மாட்டுப்பொங்கல்சிறப்பாகஅனுஷ்டிக்கப்பட்டது. (மட்டக்களப்பு மொகமட் தஸ்ரிப்)  உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கின்ற காளைகள்...
  • கோர விபத்தில் சிக்கிய கொழும்பிலிருந்து சென்ற பேருந்து ! சாரதி பலி - 8 பேர் வைத்தியசாலையில்
    கோர விபத்தில் சிக்கிய கொழும்பிலிருந்து சென்ற பேருந்து ! சாரதி பலி - 8 பேர் வைத்தியசாலையில் கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கிச் சென்ற தனியார் ப...
  • 2000 ரூபாய் நாணயத்தாள் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய தகவல்
    2000 ரூபாய் நாணயத்தாள் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய தகவல் இலங்கை மத்திய வங்கி அதன் 75 ஆவது ஆண்டு நிறைவைக்கொண்டாடும் வகையில் 20...
  • வானில் நாளை நிகழுப்போகும் அதிசயம்!
    வானில் நாளை நிகழுப்போகும் அதிசயம்! l இவ்வாண்டிற்கான வானியல் அதிசயம் ஒன்று நிகழவுள்ளது. நாளைய தினம் வானில் அரிதான வலைய சூரிய கிரகணம் (Annu...
  • யாழ். மருத்துவபீடத்தில் இடம்பெற்ற பெரும் மோசடி; சிக்கிய தென்னிலங்கை யுவதி
    யாழ். மருத்துவபீடத்தில் இடம்பெற்ற பெரும் மோசடி; சிக்கிய தென்னிலங்கை யுவதி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு அனுமதி பெறாது , மரு...
  • டித்வா புயல் தாக்கத்தால் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் பணியில் இருந்து கிராம சேவகர்கள் விலகல்!
    டித்வா புயல் தாக்கத்தால் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் பணியில் இருந்து கிராம சேவகர்கள் விலகல்! நாட்டில் ஏற்பட்ட டித்வா புயல் தாக்க...
  • தந்தையின் கைகளிலிருந்து தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு; இலங்கையில் சோகம்
    தந்தையின் கைகளிலிருந்து தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு; இலங்கையில் சோகம் தந்தையின் அரவணைப்பில் இருந்த குழந்தை, தந்தைக்குத் தூக்கம் ஏற்பட்டத...

Total Page Views

Facebook

அண்மைய செய்திகள்

செய்திக் காப்பகம்

Copyright © VTN News