VTN News
  • முகப்பு
  • உள்ளூர்
  • உலகம்
  • ஆன்மீகம்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • கட்டுரை
  • காணொளி

News Just In

7/09/2022 02:40:00 PM

Home / உள்ளூர் / ஜனாதிபதி தனது இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்- ஏஎவ்பி செய்தி !

ஜனாதிபதி தனது இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்- ஏஎவ்பி செய்தி !

on 7/09/2022 02:40:00 PM

ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து தப்பியோடியுள்ளார் என பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏஎவ்பி தெரிவித்துள்ளது

ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் நுழைந்துள்ள நிலையிலேயே ஜனாதிபதி அங்கிருந்து வெளியேறியுள்ளார் என ஏவ்பி பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி பாதுகாப்பாக அழைத்துச்செல்லப்பட்டார் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சீற்றத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றுவதை தடுப்பதற்காக படையினர் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் எனவும் அவை குறிப்பிட்டுள்ளன.

கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரின் பாதுகாப்பு தடைகளை தகர்த்துக்கொண்டு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்தை நோக்கி முன்னேறினர்.

இலங்கை கொடி மற்றும் ஹெல்மெட்டுகளுடன் சில ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்தனர்.

ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அறைகள் வராந்தக்களில் காணப்படுவதையும் ஜனாதிபதிக்கு எதிராக கோசமிடுவதையும் முகநூல் நேரலைகள் காண்பித்துள்ளன.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காணப்படுகின்றனர் – பொலிஸாரும் படையினரும் அப்பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் காரணமாக 21 பேர் காயமடைந்த நிலையி;ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதித் தடைகளை தகர்த்தெறிந்து ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலை அடைந்தனர்.இதேவேளை ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையில் போடப்பட்ட பொலிஸ் வீதித்தடைகளை தகர்த்தெறிந்து சென்ற வேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைத்து தடுப்பு வேலிகளையும் உடைத்தெறிந்து ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலை அடைந்தனர்.

மூன்று தடைகளை தாண்டி கண்ணீர்ப்புகை நீர்த்தாரை பிரயோகங்களை எதிர்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் சதாம் வீதி வழியாக ஜனாதிபதி மாளிகையின் பிரதான வாயிலை சென்றடைந்தனர்

Share



at 7/09/2022 02:40:00 PM
Tags: உள்ளூர்

No comments:

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

தமிழ்-தரம் 05

  • தமிழ்-பாகம்-01
  • தமிழ்-பாகம்-02
  • தமிழ்-பாகம்-03
  • தமிழ்-பாகம்-04
  • தமிழ்-பாகம்-05
  • தமிழ்-பாகம்-06

சுற்றாடல்-தரம் 05

  • சுற்றாடல்-பாகம்-01
  • சுற்றாடல்-பாகம்-02
  • சுற்றாடல்-பாகம்-03
  • சுற்றாடல்-பாகம்-04

கணிதம்-தரம் 05

  • கணிதம்-பாகம்-01
  • கணிதம்-பாகம்-02
  • கணிதம்-பாகம்-03
  • கணிதம்-பாகம்-04
  • கணிதம்-பாகம்-05
  • கணிதம்-பாகம்-06

நுண்ணறிவு-தரம் 05

  • நுண்ணறிவு-பாகம்-01
  • நுண்ணறிவு-பாகம்-02
  • நுண்ணறிவு-பாகம்-03

செய்திகளைத் தேட

செய்திகளைப் பெற

Like

Follow

Subscribe

அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  • கிழக்கில் தூக்கில் தொங்கிய நிலையில் பாடசாலை மாணவன் சடலமாக மீட்பு
    கிழக்கில் தூக்கில் தொங்கிய நிலையில் பாடசாலை மாணவன் சடலமாக மீட்பு இரவு தூக்கத்திற்கு சென்ற பாடசாலை மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீ...
  • உருவகேலி பேசும் விரிவுரையாளர்; கிழக்கு பல்கலைக்கழக மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி
    உருவகேலி பேசும் விரிவுரையாளர்; கிழக்கு பல்கலைக்கழக மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் ...
  • கிழக்கு மாகாண ஆசிரியர் பற்றாக்குறைக்குத் தீர்வு: 2500 பேர் விரைவில் நியமனம்
    கிழக்கு மாகாண ஆசிரியர் பற்றாக்குறைக்குத் தீர்வு: 2500 பேர் விரைவில் நியமனம் கிழக்கு மாகாணத்தில் நிலவிவரும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி ...
  • வெல்லாவெளி சங்கர்புரம் விநாயகர் ஆலயத்தின். புதுவருட. பஞ்சாங்கம். நாட்காட்டி மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர். கந்தசாமி பிரபு வெளியீட்டுவைத்தார்,
    வெல்லாவெளி சங்கர்புரம் விநாயகர் ஆலயத்தின். புதுவருட. பஞ்சாங்கம். நாட்காட்டி மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர். கந்தசாமி பிரபு வெளியீட்டுவைத...
  • உதவிப் பிரதேச செயலாளராக கடமைகளை பொறுப்பேற்றார் ஏ.எஸ்.எம். அஸீம்
    உதவிப் பிரதேச செயலாளராக கடமைகளை பொறுப்பேற்றார் ஏ.எஸ்.எம். அஸீம் நூருல் ஹுதா உமர் கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் மாகாண பணிப்பாளராக க...
  • மட்டக்களப்பை நெருங்கி வரும் தாழமுக்கம்; நாட்டில் இன்று பலத்த காற்றுடன் மழை
    மட்டக்களப்பை நெருங்கி வரும் தாழமுக்கம்; நாட்டில் இன்று பலத்த காற்றுடன் மழை இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்த...
  • திருகோணமலையை இலக்கு வைத்து டிரம்பின் நகர்வு
    திருகோணமலையை இலக்கு வைத்து டிரம்பின் நகர்வு அமெரிக்கா, அண்மைக்காலமாக தாய்வான் யுத்தத்துக்கான எச்சரிப்புகளை அளிப்பதில், திருகோணமலைத் துறைமுகத...
  • சிறையிலுள்ள டக்ளஸ், ஜோன்ஸ்டன் மற்றும் அவரின் மகன்களுக்கு திடீரென ஏற்பட்ட சுகயீனம்
    சிறையிலுள்ள டக்ளஸ், ஜோன்ஸ்டன் மற்றும் அவரின் மகன்களுக்கு திடீரென ஏற்பட்ட சுகயீனம் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்கள் மற்று...
  • நாளை மாலை கரையைக் கடக்கவுள்ள தாழமுக்கம் : வெளியான அறிவிப்பு
    நாளை மாலை கரையைக் கடக்கவுள்ள தாழமுக்கம் : வெளியான அறிவிப்பு இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள விருத்தியடைந்த தாழம...
  • மட்டக்களப்பு செங்கலடி - பதுளை வீதிச் சந்தியில் வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்ளை!
    மட்டக்களப்பு செங்கலடி - பதுளை வீதிச் சந்தியில் வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்ளை! மட்டக்களப்பு,ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி - பதுளை...

Total Page Views

Facebook

அண்மைய செய்திகள்

செய்திக் காப்பகம்

Copyright © VTN News