VTN News
  • முகப்பு
  • உள்ளூர்
  • உலகம்
  • ஆன்மீகம்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • கட்டுரை
  • காணொளி

News Just In

7/09/2022 02:40:00 PM

Home / உள்ளூர் / ஜனாதிபதி தனது இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்- ஏஎவ்பி செய்தி !

ஜனாதிபதி தனது இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்- ஏஎவ்பி செய்தி !

on 7/09/2022 02:40:00 PM

ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து தப்பியோடியுள்ளார் என பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏஎவ்பி தெரிவித்துள்ளது

ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் நுழைந்துள்ள நிலையிலேயே ஜனாதிபதி அங்கிருந்து வெளியேறியுள்ளார் என ஏவ்பி பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி பாதுகாப்பாக அழைத்துச்செல்லப்பட்டார் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சீற்றத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றுவதை தடுப்பதற்காக படையினர் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் எனவும் அவை குறிப்பிட்டுள்ளன.

கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரின் பாதுகாப்பு தடைகளை தகர்த்துக்கொண்டு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்தை நோக்கி முன்னேறினர்.

இலங்கை கொடி மற்றும் ஹெல்மெட்டுகளுடன் சில ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்தனர்.

ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அறைகள் வராந்தக்களில் காணப்படுவதையும் ஜனாதிபதிக்கு எதிராக கோசமிடுவதையும் முகநூல் நேரலைகள் காண்பித்துள்ளன.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காணப்படுகின்றனர் – பொலிஸாரும் படையினரும் அப்பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் காரணமாக 21 பேர் காயமடைந்த நிலையி;ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதித் தடைகளை தகர்த்தெறிந்து ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலை அடைந்தனர்.இதேவேளை ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையில் போடப்பட்ட பொலிஸ் வீதித்தடைகளை தகர்த்தெறிந்து சென்ற வேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைத்து தடுப்பு வேலிகளையும் உடைத்தெறிந்து ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலை அடைந்தனர்.

மூன்று தடைகளை தாண்டி கண்ணீர்ப்புகை நீர்த்தாரை பிரயோகங்களை எதிர்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் சதாம் வீதி வழியாக ஜனாதிபதி மாளிகையின் பிரதான வாயிலை சென்றடைந்தனர்

Share



at 7/09/2022 02:40:00 PM
Tags: உள்ளூர்

No comments:

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

தமிழ்-தரம் 05

  • தமிழ்-பாகம்-01
  • தமிழ்-பாகம்-02
  • தமிழ்-பாகம்-03
  • தமிழ்-பாகம்-04
  • தமிழ்-பாகம்-05
  • தமிழ்-பாகம்-06

சுற்றாடல்-தரம் 05

  • சுற்றாடல்-பாகம்-01
  • சுற்றாடல்-பாகம்-02
  • சுற்றாடல்-பாகம்-03
  • சுற்றாடல்-பாகம்-04

கணிதம்-தரம் 05

  • கணிதம்-பாகம்-01
  • கணிதம்-பாகம்-02
  • கணிதம்-பாகம்-03
  • கணிதம்-பாகம்-04
  • கணிதம்-பாகம்-05
  • கணிதம்-பாகம்-06

நுண்ணறிவு-தரம் 05

  • நுண்ணறிவு-பாகம்-01
  • நுண்ணறிவு-பாகம்-02
  • நுண்ணறிவு-பாகம்-03

செய்திகளைத் தேட

செய்திகளைப் பெற

Like

Follow

Subscribe

அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  • மட்டக்களப்பில் ஈவிரக்கமற்ற செயல்;புலனாய்வு பிரிவினர் முழங்காலில் இருக்க வைத்து சித்திரவதை
    மட்டக்களப்பில் ஈவிரக்கமற்ற செயல்;புலனாய்வு பிரிவினர் முழங்காலில் இருக்க வைத்து சித்திரவதை மட்டக்களப்பு செட்டிபாளையம் கடற்கரையில் அனுமதியற்ற ...
  • சுபகிருது வருடப்பிறப்பு சுப நேரங்கள்!
    மலரும் மங்களகரமான சுபகிருது என்ற புதிய ஆண்டு (14.04.2020) வியாழக்கிழமை காலை 7.50 க்கு வாக்கிய பஞ்சாங்கப்படி பிறக்கிறது. இதேவேளை மலரும் சுபகி...
  • கிடப்பிலுள்ள தீர்க்கப்படாத பொதுப் பிரச்சினைகளை கிழக்கு மாகாண ஆளுநரின் கவனத்திற்கு முன்கொண்டு சமர்ப்பித்த இளைஞன்.
    கிடப்பிலுள்ள தீர்க்கப்படாத பொதுப் பிரச்சினைகளை கிழக்கு மாகாண ஆளுநரின் கவனத்திற்கு முன்கொண்டு சமர்ப்பித்த இளைஞன். (ஏ.எச்.ஏ.ஹுஸைன்) மட்டக்களப்...
  • கர்பிணித்தாய்மாருக்கான போஷாக்கு பொதிகள் வழங்கி வைப்பு:
    கர்பிணித்தாய்மாருக்கான போஷாக்கு பொதிகள் வழங்கி வைப்பு: கிழக்கு -குமுகாய மேம்பாட்டு மன்றத்தின் (SAFE ) வழிகாட்டுதலில் திருக்கோயில் பிரதேச சுக...
  • போர்நிறுத்தத்திற்கு மத்தியில் திடீரெனெ ஹார்முஸில் கப்பல் போக்குவரத்தை நிறுத்திய ஈரான்
    போர்நிறுத்தத்திற்கு மத்தியில் திடீரெனெ ஹார்முஸில் கப்பல் போக்குவரத்தை நிறுத்திய ஈரான் அமெரிக்கா-ஈரான் இடையிலான இரண்டு வார போர் நிறுத்த ஒப்பந...
  • காரைதீவு பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது!
    காரைதீவு பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்ஐஸ்போதைப்பொருளுடன் கைது! அம்பாறை மாவட்டத்தில் விளையாட்டுப் பொருட்களுடன் சூட்சுமமாக கொரியர் சேவை ஊடாக...
  • சம்மாந்துறை அரபுக் கலாசாலைகளில் சுகாதார பரிசோதனை: தரநிலைகளை மேம்படுத்த நடவடிக்கை
    சம்மாந்துறை அரபுக் கலாசாலைகளில் சுகாதார பரிசோதனை: தரநிலைகளை மேம்படுத்த நடவடிக்கை நூருல் ஹுதா உமர் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர...
  • மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை குழந்தை நலமருத்துவர் விடுக்கும் செய்தி
    மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை குழந்தை நலமருத்துவர் விடுக்கும்  செய்தி   நாளை வெள்ளிக்கிழமை நடைபெறும் Ward 33 குழந்தைகள் மருத்துவ கிளினிக் வ...
  • மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் அதி சொகுசு பேருந்துவெலிக்கந்தையில் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து; ஒருவர் உயிரிழப்பு
    வெலிக்கந்தையில் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து; ஒருவர் உயிரிழப்பு மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் அதி சொ...
  • சற்று முன்னர் ஈரானிய தீவில் வெடிப்புச் சத்தம்.. வெளியான பரபரப்பு தகவல்
    சற்று முன்னர் ஈரானிய தீவில் வெடிப்புச் சத்தம்.. வெளியான பரபரப்பு தகவல் ஈரானின் சிர்ரி தீவில் வெடிப்புகள் நிகழ்ந்துள்ளதாக ஈரானில் உள்ள அரசு ச...

Total Page Views

Facebook

அண்மைய செய்திகள்

செய்திக் காப்பகம்

Copyright © VTN News