VTN News
  • முகப்பு
  • உள்ளூர்
  • உலகம்
  • ஆன்மீகம்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • கட்டுரை
  • காணொளி

News Just In

7/09/2022 02:40:00 PM

Home / உள்ளூர் / ஜனாதிபதி தனது இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்- ஏஎவ்பி செய்தி !

ஜனாதிபதி தனது இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்- ஏஎவ்பி செய்தி !

on 7/09/2022 02:40:00 PM

ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து தப்பியோடியுள்ளார் என பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏஎவ்பி தெரிவித்துள்ளது

ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் நுழைந்துள்ள நிலையிலேயே ஜனாதிபதி அங்கிருந்து வெளியேறியுள்ளார் என ஏவ்பி பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி பாதுகாப்பாக அழைத்துச்செல்லப்பட்டார் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சீற்றத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றுவதை தடுப்பதற்காக படையினர் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் எனவும் அவை குறிப்பிட்டுள்ளன.

கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரின் பாதுகாப்பு தடைகளை தகர்த்துக்கொண்டு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்தை நோக்கி முன்னேறினர்.

இலங்கை கொடி மற்றும் ஹெல்மெட்டுகளுடன் சில ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்தனர்.

ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அறைகள் வராந்தக்களில் காணப்படுவதையும் ஜனாதிபதிக்கு எதிராக கோசமிடுவதையும் முகநூல் நேரலைகள் காண்பித்துள்ளன.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காணப்படுகின்றனர் – பொலிஸாரும் படையினரும் அப்பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் காரணமாக 21 பேர் காயமடைந்த நிலையி;ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதித் தடைகளை தகர்த்தெறிந்து ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலை அடைந்தனர்.இதேவேளை ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையில் போடப்பட்ட பொலிஸ் வீதித்தடைகளை தகர்த்தெறிந்து சென்ற வேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைத்து தடுப்பு வேலிகளையும் உடைத்தெறிந்து ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலை அடைந்தனர்.

மூன்று தடைகளை தாண்டி கண்ணீர்ப்புகை நீர்த்தாரை பிரயோகங்களை எதிர்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் சதாம் வீதி வழியாக ஜனாதிபதி மாளிகையின் பிரதான வாயிலை சென்றடைந்தனர்

Share



at 7/09/2022 02:40:00 PM
Tags: உள்ளூர்

No comments:

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

தமிழ்-தரம் 05

  • தமிழ்-பாகம்-01
  • தமிழ்-பாகம்-02
  • தமிழ்-பாகம்-03
  • தமிழ்-பாகம்-04
  • தமிழ்-பாகம்-05
  • தமிழ்-பாகம்-06

சுற்றாடல்-தரம் 05

  • சுற்றாடல்-பாகம்-01
  • சுற்றாடல்-பாகம்-02
  • சுற்றாடல்-பாகம்-03
  • சுற்றாடல்-பாகம்-04

கணிதம்-தரம் 05

  • கணிதம்-பாகம்-01
  • கணிதம்-பாகம்-02
  • கணிதம்-பாகம்-03
  • கணிதம்-பாகம்-04
  • கணிதம்-பாகம்-05
  • கணிதம்-பாகம்-06

நுண்ணறிவு-தரம் 05

  • நுண்ணறிவு-பாகம்-01
  • நுண்ணறிவு-பாகம்-02
  • நுண்ணறிவு-பாகம்-03

செய்திகளைத் தேட

செய்திகளைப் பெற

Like

Follow

Subscribe

அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  • வெல்லாவெளி சங்கர்புரம் விநாயகர் ஆலயத்தின். புதுவருட. பஞ்சாங்கம். நாட்காட்டி மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர். கந்தசாமி பிரபு வெளியீட்டுவைத்தார்,
    வெல்லாவெளி சங்கர்புரம் விநாயகர் ஆலயத்தின். புதுவருட. பஞ்சாங்கம். நாட்காட்டி மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர். கந்தசாமி பிரபு வெளியீட்டுவைத...
  • கிழக்கில் ஏற்படும் திடீர் வானிலை மாற்றம்.. அவதானமாக இருக்க வலியுறுத்து
    கிழக்கில் ஏற்படும் திடீர் வானிலை மாற்றம்.. அவதானமாக இருக்க வலியுறுத்து இலங்கையின் கிழக்குப் பகுதியில் குறைந்த அளவிலான காற்றழுத்தத் தாழ்வு நி...
  • லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
    லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் குறித்த முடிவை எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிப்பதாக ல...
  • தையிட்டிக்கு இரகசியமாக கொண்டு செல்லப்பட இருந்த புத்தர்சிலை : பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை
    தையிட்டிக்கு இரகசியமாக கொண்டு செல்லப்பட இருந்த புத்தர்சிலை : பொலிஸாரின் நடவடிக்கை தையிட்டி விகாரைக்கு கொண்டு வரவிருந்த புத்தர் சிலை ஒன்று இர...
  • ஜித்தா கொன்ஸல் ஜெனரலின் பதவி சாதாரண நிர்வாகப் பதவி அல்ல; அது மத, சமூக மற்றும் மனிதாபிமான பொறுப்புகளுடன் நேரடியாக தொடர்புடையது
    ஜித்தா கொன்ஸல் ஜெனரலின் பதவி சாதாரண நிர்வாகப் பதவி அல்ல; அது மத, சமூக மற்றும் மனிதாபிமான பொறுப்புகளுடன் நேரடியாக தொடர்புடையது : சபூர் ஆதம் ந...
  • உலக சந்தையில் வரலாறு காணாத உயர்வை எட்டிய தங்க விலை! இலங்கையிலும் திடீர் மாற்றம்
    உலக சந்தையில் வரலாறு காணாத உயர்வை எட்டிய தங்க விலை! இலங்கையிலும் திடீர் மாற்றம் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா சிறைப்பிடித்தத...
  • 90 நாட்கள் சிறையில் அடைக்கப்படவிருந்த டக்ளஸ்! சி.ஐ.டி அதிகாரிகளுக்கு காத்திருக்கும் சவால்
    90 நாட்கள் சிறையில் அடைக்கப்படவிருந்த டக்ளஸ்! சி.ஐ.டி அதிகாரிகளுக்கு காத்திருக்கும் சவால் இலங்கையில் முந்தைய அரசாங்கங்களின் போது பல தமிழ் இள...
  • ஜனாதிபதி அநுர விடுத்துள்ள எச்சரிக்கை! கடுமையாகும் சட்டம் - சிக்கப் போகும் பலர்
    ஜனாதிபதி அநுர விடுத்துள்ள எச்சரிக்கை! கடுமையாகும் சட்டம் - சிக்கப் போகும் பலர் இலங்கையில் எவரேனும் வரி ஏய்ப்பு செய்தால் அவருக்கு எதிராக கடும...
  • திருகோணமலையை இலக்கு வைத்து டிரம்பின் நகர்வு
    திருகோணமலையை இலக்கு வைத்து டிரம்பின் நகர்வு அமெரிக்கா, அண்மைக்காலமாக தாய்வான் யுத்தத்துக்கான எச்சரிப்புகளை அளிப்பதில், திருகோணமலைத் துறைமுகத...
  • பௌத்த சின்னங்கள் பரப்பப்படுவது வரலாற்று அடிப்படை அற்றது - தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்!
    பௌத்த சின்னங்கள் பரப்பப்படுவது வரலாற்று அடிப்படை அற்றது - தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்! தமிழ் பிராந்தியங்களில் சிங்கள பௌத்...

Total Page Views

Facebook

அண்மைய செய்திகள்

செய்திக் காப்பகம்

Copyright © VTN News