VTN News
  • முகப்பு
  • உள்ளூர்
  • உலகம்
  • ஆன்மீகம்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • கட்டுரை
  • காணொளி

News Just In

7/09/2022 02:40:00 PM

Home / உள்ளூர் / ஜனாதிபதி தனது இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்- ஏஎவ்பி செய்தி !

ஜனாதிபதி தனது இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்- ஏஎவ்பி செய்தி !

on 7/09/2022 02:40:00 PM

ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து தப்பியோடியுள்ளார் என பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏஎவ்பி தெரிவித்துள்ளது

ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் நுழைந்துள்ள நிலையிலேயே ஜனாதிபதி அங்கிருந்து வெளியேறியுள்ளார் என ஏவ்பி பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி பாதுகாப்பாக அழைத்துச்செல்லப்பட்டார் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சீற்றத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றுவதை தடுப்பதற்காக படையினர் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் எனவும் அவை குறிப்பிட்டுள்ளன.

கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரின் பாதுகாப்பு தடைகளை தகர்த்துக்கொண்டு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்தை நோக்கி முன்னேறினர்.

இலங்கை கொடி மற்றும் ஹெல்மெட்டுகளுடன் சில ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்தனர்.

ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அறைகள் வராந்தக்களில் காணப்படுவதையும் ஜனாதிபதிக்கு எதிராக கோசமிடுவதையும் முகநூல் நேரலைகள் காண்பித்துள்ளன.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காணப்படுகின்றனர் – பொலிஸாரும் படையினரும் அப்பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் காரணமாக 21 பேர் காயமடைந்த நிலையி;ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதித் தடைகளை தகர்த்தெறிந்து ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலை அடைந்தனர்.இதேவேளை ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையில் போடப்பட்ட பொலிஸ் வீதித்தடைகளை தகர்த்தெறிந்து சென்ற வேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைத்து தடுப்பு வேலிகளையும் உடைத்தெறிந்து ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலை அடைந்தனர்.

மூன்று தடைகளை தாண்டி கண்ணீர்ப்புகை நீர்த்தாரை பிரயோகங்களை எதிர்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் சதாம் வீதி வழியாக ஜனாதிபதி மாளிகையின் பிரதான வாயிலை சென்றடைந்தனர்

Share



at 7/09/2022 02:40:00 PM
Tags: உள்ளூர்

No comments:

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

தமிழ்-தரம் 05

  • தமிழ்-பாகம்-01
  • தமிழ்-பாகம்-02
  • தமிழ்-பாகம்-03
  • தமிழ்-பாகம்-04
  • தமிழ்-பாகம்-05
  • தமிழ்-பாகம்-06

சுற்றாடல்-தரம் 05

  • சுற்றாடல்-பாகம்-01
  • சுற்றாடல்-பாகம்-02
  • சுற்றாடல்-பாகம்-03
  • சுற்றாடல்-பாகம்-04

கணிதம்-தரம் 05

  • கணிதம்-பாகம்-01
  • கணிதம்-பாகம்-02
  • கணிதம்-பாகம்-03
  • கணிதம்-பாகம்-04
  • கணிதம்-பாகம்-05
  • கணிதம்-பாகம்-06

நுண்ணறிவு-தரம் 05

  • நுண்ணறிவு-பாகம்-01
  • நுண்ணறிவு-பாகம்-02
  • நுண்ணறிவு-பாகம்-03

செய்திகளைத் தேட

செய்திகளைப் பெற

Like

Follow

Subscribe

அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  • செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய பாறை 4.3 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனை
    செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய பாறை 4.3 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனை பூமியில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின...
  • இன்று முதல் கிராமம் கிராமமாக செல்லவுள்ள நாமல் - தேர்தலை இலக்குவைத்து விசேட திட்டம்!
    இன்று முதல் கிராமம் கிராமமாக செல்லவுள்ள நாமல் - தேர்தலை இலக்குவைத்து விசேட திட்டம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்துள்ள 'நாமலுடன் க...
  • மிளகாய் தோட்டத்தில் பயங்கரம்; குடும்பஸ்தர் வெட்டிக் கொலை! களுவாஞ்சிகுடியில் சம்பவம்
    மிளகாய் தோட்டத்தில் பயங்கரம்; குடும்பஸ்தர் வெட்டிக் கொலை! களுவாஞ்சிகுடியில்  சம்பவம்  மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பிரதேசத்திலுள்ள கெல்பேஜ்...
  • பிள்ளையானிடம் இருந்து கிடைத்த மிக முக்கியத் தகவல்கள்! அநுர பகிரங்கப்படுத்திய இரகசியம் மாயம்
    பிள்ளையானிடம் இருந்து கிடைத்த மிக முக்கியத் தகவல்கள்! அநுர பகிரங்கப்படுத்திய இரகசியம் மாயம் தற்போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்...
  • கோட்டாபய –சுரேஷ் சலே ஆகியோரால் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள்!
    கோட்டாபய –சுரேஷ் சலே ஆகியோரால் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள்! மகிந்த ராஜபக்சவை 2015 ஆம் ஆண்டு மீண்டும் ஜனாதிபதியாக்கிய அப்ப...
  • ஏறாவூரில் புதிய பொதுச் சந்தை திறப்பு: வர்த்தக வளர்ச்சிக்கு புதிய வாய்ப்பு
    ஏறாவூரில் புதிய பொதுச் சந்தை திறப்பு: வர்த்தக வளர்ச்சிக்கு புதிய வாய்ப்பு நூருல் ஹுதா உமர் ஏறாவூர் நகரின் வர்த்தக வளர்ச்சிக்கு புதிய அத்தியா...
  • ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுவர்கள், பெண்கள் உட்பட பலர் பலி!இலங்கையில் பெரும் சோகம்
    ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுவர்கள், பெண்கள் உட்பட பலர் பலி!இலங்கையில் பெரும் சோகம் புத்தாண்டு விடுமுறையில் தெதுரு ஓயாவில் நீராட சென்று 3 சி...
  • சிறையில் பிள்ளையானின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகிறா? கட்சித் தொண்டர்கள் சத்தியாகிரகம்
    சிறையில் பிள்ளையானின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகிறா? கட்சித் தொண்டர்கள் சத்தியாகிரகம் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் ப...
  • மட்டக்களப்பில் விவசாயி சுட்டுக்கொலை ; பிரேத பரிசோதனையில் உறுதி
    மட்டக்களப்பில் விவசாயி சுட்டுக்கொலை ; பிரேத பரிசோதனையில் உறுதி மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் மிளகாய் செய்கை தோட்டத்தில் காயங்கள...
  • உச்சக்கட்டத்தை எட்டியுள்ள ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: தயார் நிலையில் படைகள் - ஈரானின் உச்ச தலைவர் கடும் எச்சரிக்கை
    உச்சக்கட்டத்தை எட்டியுள்ள ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: தயார் நிலையில் படைகள் - ஈரானின் உச்ச தலைவர் கடும் எச்சரிக்கை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆக...

Total Page Views

Facebook

அண்மைய செய்திகள்

செய்திக் காப்பகம்

Copyright © VTN News