VTN News
  • முகப்பு
  • உள்ளூர்
  • உலகம்
  • ஆன்மீகம்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • கட்டுரை
  • காணொளி

News Just In

7/09/2022 02:40:00 PM

Home / உள்ளூர் / ஜனாதிபதி தனது இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்- ஏஎவ்பி செய்தி !

ஜனாதிபதி தனது இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்- ஏஎவ்பி செய்தி !

on 7/09/2022 02:40:00 PM

ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து தப்பியோடியுள்ளார் என பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏஎவ்பி தெரிவித்துள்ளது

ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் நுழைந்துள்ள நிலையிலேயே ஜனாதிபதி அங்கிருந்து வெளியேறியுள்ளார் என ஏவ்பி பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி பாதுகாப்பாக அழைத்துச்செல்லப்பட்டார் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சீற்றத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றுவதை தடுப்பதற்காக படையினர் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் எனவும் அவை குறிப்பிட்டுள்ளன.

கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரின் பாதுகாப்பு தடைகளை தகர்த்துக்கொண்டு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்தை நோக்கி முன்னேறினர்.

இலங்கை கொடி மற்றும் ஹெல்மெட்டுகளுடன் சில ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்தனர்.

ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அறைகள் வராந்தக்களில் காணப்படுவதையும் ஜனாதிபதிக்கு எதிராக கோசமிடுவதையும் முகநூல் நேரலைகள் காண்பித்துள்ளன.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காணப்படுகின்றனர் – பொலிஸாரும் படையினரும் அப்பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் காரணமாக 21 பேர் காயமடைந்த நிலையி;ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதித் தடைகளை தகர்த்தெறிந்து ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலை அடைந்தனர்.இதேவேளை ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையில் போடப்பட்ட பொலிஸ் வீதித்தடைகளை தகர்த்தெறிந்து சென்ற வேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைத்து தடுப்பு வேலிகளையும் உடைத்தெறிந்து ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலை அடைந்தனர்.

மூன்று தடைகளை தாண்டி கண்ணீர்ப்புகை நீர்த்தாரை பிரயோகங்களை எதிர்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் சதாம் வீதி வழியாக ஜனாதிபதி மாளிகையின் பிரதான வாயிலை சென்றடைந்தனர்

Share



at 7/09/2022 02:40:00 PM
Tags: உள்ளூர்

No comments:

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

தமிழ்-தரம் 05

  • தமிழ்-பாகம்-01
  • தமிழ்-பாகம்-02
  • தமிழ்-பாகம்-03
  • தமிழ்-பாகம்-04
  • தமிழ்-பாகம்-05
  • தமிழ்-பாகம்-06

சுற்றாடல்-தரம் 05

  • சுற்றாடல்-பாகம்-01
  • சுற்றாடல்-பாகம்-02
  • சுற்றாடல்-பாகம்-03
  • சுற்றாடல்-பாகம்-04

கணிதம்-தரம் 05

  • கணிதம்-பாகம்-01
  • கணிதம்-பாகம்-02
  • கணிதம்-பாகம்-03
  • கணிதம்-பாகம்-04
  • கணிதம்-பாகம்-05
  • கணிதம்-பாகம்-06

நுண்ணறிவு-தரம் 05

  • நுண்ணறிவு-பாகம்-01
  • நுண்ணறிவு-பாகம்-02
  • நுண்ணறிவு-பாகம்-03

செய்திகளைத் தேட

செய்திகளைப் பெற

Like

Follow

Subscribe

அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  • பட்டமளிப்பு விழாவில் தொலைந்த தங்க நகை உரிய மாணவியிடம் மீள ஒப்படைப்பு !
    பட்டமளிப்பு விழாவில் தொலைந்த தங்க நகை உரிய மாணவியிடம் மீள ஒப்படைப்பு : நேர்மையை வெளிப்படுத்திய தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவிக்கு பாராட்டு ...
  • அரச ஊழியர்களுக்கு 2027 பட்ஜட்டிலும் சம்பளவுயர்வு
    அரச ஊழியர்களுக்கு 2027 பட்ஜட்டிலும் சம்பளவுயர்வு அரச ஊழியர்களுக்கு 2027 பட்ஜட்டிலும் சம்பளவுயர்வு கிடைக்கும் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ...
  • கிழக்கு புற்று நோயாளர் பராமரிப்பு நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள மருத்துவத்துறைசார் கற்கைநெறிகளுக்கான கல்வி நிறுவனம் நாட்டிற்கு மனித நேயத்தின் பிரதிபலிப்பாய் மிளிரும் என்று தெரிவிப்பு!
    கிழக்கு புற்று நோயாளர் பராமரிப்பு நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள மருத்துவத்துறைசார் கற்கைநெறிகளுக்கான கல்வி நிறுவனம் நாட்டிற்கு மனித நே...
  • 36வது வருடத்தில் ஏறாவூர்ப் படுகொலை - ஷுஹதாக்கள் நினைவு நிகழ்வு.
    36வது வருடத்தில் ஏறாவூர்ப் படுகொலை - ஷுஹதாக்கள் நினைவு நிகழ்வு. “குழந்தையின் ஜனாஸாவை கையிலே ஏந்தியவாறு கண்ணீர் மல்கி, படுகொலை செய்யப்படும் அ...
  • மீனவர்களின் வாழ்வாதாரம் முதல் இறங்குதுறைமுகம் வரை..! அமைச்சரிடம் சாணக்கியன் எடுத்துரைத்த பிரச்சினைகள்!
    மீனவர்களின் வாழ்வாதாரம் முதல் இறங்குதுறைமுகம் வரை..! அமைச்சரிடம் சாணக்கியன் எடுத்துரைத்த பிரச்சினைகள் மட்டக்களப்பில் மீன்பிடித் துறையின் சவா...
  • 2025/2026 மருத்துவ பீடத் தெரிவான மட்டக்களப்பு மாவட்ட மாணவர்களின் விவரங்கள்!
    2025/2026 மருத்துவ பீடத் தெரிவான மட்டக்களப்பு மாவட்ட மாணவர்களின் விவரங்கள் மொத்த தெரிவுகள் மொத்த மாணவர்கள் : 64 திறமை அடிப்படையில் : 26 ம...
  • எனக்கு அறவே பிடிக்காத விடயத்தை செய்ய ஜனாதிபதியே வற்புறுத்தினார்! கே.டி.லால்காந்த பகிரங்கம்
    எனக்கு அறவே பிடிக்காத விடயத்தை செய்ய ஜனாதிபதியே வற்புறுத்தினார்! கே.டி.லால்காந்த பகிரங்கம் எதிர்காலத்தில் கண்டி மாவட்டத் தேர்தலில் போட்டியிட...
  • உயர்தரப் பரீட்சையில் குழப்பம் -வினாத்தாள்கள் அம்பாலாந்தோட்டை மீட்பு!
    உயர்தரப் பரீட்சையில் குழப்பம் -வினாத்தாள்கள் அம்பாலாந்தோட்டை மீட்பு! தற்போது நடைபெற்று வரும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் போது,...
  • வெற்றிகரமாக அகற்றப்பட்ட3 கிலோ 100 கிராம் சிறுநீரக கல்: திருகோணமலை வைத்தியசாலையில் சாதனை:
    வெற்றிகரமாக அகற்றப்பட்ட3 கிலோ 100 கிராம்  சிறுநீரக கல்: திருகோணமலை வைத்தியசாலையில் சாதனை: திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந...
  • சமூக அமைப்பினால் கிராமிய மட்டத்தில் டெங்கு ஒழிப்புக்காக சிரமதானம்
    சமூக அமைப்பினால் கிராமிய மட்டத்தில் டெங்கு ஒழிப்புக்காக சிரமதானம் (ஏ.எச்.ஏ. ஹுஸைன்) இலங்கையில் டெங்கு நோய் அதிகமாக பரவி வருவதை தடுக்கும் மு...

Total Page Views

Facebook

அண்மைய செய்திகள்

செய்திக் காப்பகம்

Copyright © VTN News