VTN News
  • முகப்பு
  • உள்ளூர்
  • உலகம்
  • ஆன்மீகம்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • கட்டுரை
  • காணொளி

News Just In

7/09/2022 02:40:00 PM

Home / உள்ளூர் / ஜனாதிபதி தனது இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்- ஏஎவ்பி செய்தி !

ஜனாதிபதி தனது இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்- ஏஎவ்பி செய்தி !

on 7/09/2022 02:40:00 PM

ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து தப்பியோடியுள்ளார் என பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏஎவ்பி தெரிவித்துள்ளது

ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் நுழைந்துள்ள நிலையிலேயே ஜனாதிபதி அங்கிருந்து வெளியேறியுள்ளார் என ஏவ்பி பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி பாதுகாப்பாக அழைத்துச்செல்லப்பட்டார் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சீற்றத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றுவதை தடுப்பதற்காக படையினர் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் எனவும் அவை குறிப்பிட்டுள்ளன.

கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரின் பாதுகாப்பு தடைகளை தகர்த்துக்கொண்டு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்தை நோக்கி முன்னேறினர்.

இலங்கை கொடி மற்றும் ஹெல்மெட்டுகளுடன் சில ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்தனர்.

ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அறைகள் வராந்தக்களில் காணப்படுவதையும் ஜனாதிபதிக்கு எதிராக கோசமிடுவதையும் முகநூல் நேரலைகள் காண்பித்துள்ளன.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காணப்படுகின்றனர் – பொலிஸாரும் படையினரும் அப்பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் காரணமாக 21 பேர் காயமடைந்த நிலையி;ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதித் தடைகளை தகர்த்தெறிந்து ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலை அடைந்தனர்.இதேவேளை ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையில் போடப்பட்ட பொலிஸ் வீதித்தடைகளை தகர்த்தெறிந்து சென்ற வேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைத்து தடுப்பு வேலிகளையும் உடைத்தெறிந்து ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலை அடைந்தனர்.

மூன்று தடைகளை தாண்டி கண்ணீர்ப்புகை நீர்த்தாரை பிரயோகங்களை எதிர்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் சதாம் வீதி வழியாக ஜனாதிபதி மாளிகையின் பிரதான வாயிலை சென்றடைந்தனர்

Share



at 7/09/2022 02:40:00 PM
Tags: உள்ளூர்

No comments:

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

தமிழ்-தரம் 05

  • தமிழ்-பாகம்-01
  • தமிழ்-பாகம்-02
  • தமிழ்-பாகம்-03
  • தமிழ்-பாகம்-04
  • தமிழ்-பாகம்-05
  • தமிழ்-பாகம்-06

சுற்றாடல்-தரம் 05

  • சுற்றாடல்-பாகம்-01
  • சுற்றாடல்-பாகம்-02
  • சுற்றாடல்-பாகம்-03
  • சுற்றாடல்-பாகம்-04

கணிதம்-தரம் 05

  • கணிதம்-பாகம்-01
  • கணிதம்-பாகம்-02
  • கணிதம்-பாகம்-03
  • கணிதம்-பாகம்-04
  • கணிதம்-பாகம்-05
  • கணிதம்-பாகம்-06

நுண்ணறிவு-தரம் 05

  • நுண்ணறிவு-பாகம்-01
  • நுண்ணறிவு-பாகம்-02
  • நுண்ணறிவு-பாகம்-03

செய்திகளைத் தேட

செய்திகளைப் பெற

Like

Follow

Subscribe

அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  • புலமைப்பரிசில் பரீட்சை - உயர்தர பரீட்சை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
    புலமைப்பரிசில் பரீட்சை - உயர்தர பரீட்சை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையை கருத்திற் கொண்டு, எதிர்வரும் ந...
  • 18 வயதில் உலகின் இளம் பேராசிரியர்: 306 ஆண்டு சாதனை முறியடிப்பு
    18 வயதில் உலகின் இளம் பேராசிரியர்: 306 ஆண்டு சாதனை முறியடிப்பு  18 வயதில் உலகின் இளம் பேராசிரிய​ராக மாறி சாதனை படைத்​துள்​ளார் அமெரிக்​காவைச...
  • உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு அரச புலனாய்வுச் சேவையிலிருந்து நிதி.. வெளியான அதிர்ச்சி தகவல்!
    உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு அரச புலனாய்வுச் சேவையிலிருந்து நிதி.. வெளியான அதிர்ச்சி தகவல்! நாட்டில் ஒரு அசாதாரண நிலைமையை தோற்றுவிப்பதற்கான...
  • சவுக்கு சங்கரின் மகன் தற்கொலை; சொர்க்கத்தில் என் தாய் பார்த்துக்கொள்வார்...உருகவைக்கும் பதிவு
    சவுக்கு சங்கரின் மகன் தற்கொலை; சொர்க்கத்தில் என் தாய் பார்த்துக்கொள்வார்...உருகவைக்கும் பதிவு யுடியூப் பிரபலம் சவுக்கு சங்கர் பதின்ம வயதான ம...
  • உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்குடன் தொடர்புடைய நீதிமன்ற நீதிபதிகள் தீவிர பாதுகாப்பில்
    உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்குடன் தொடர்புடைய நீதிமன்ற நீதிபதிகள் தீவிர பாதுகாப்பில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்குடன் தொடர்புடைய மூவரடங்...
  • மாளிகைக்காடு மையவாடிக்கு நிரந்தரத் தீர்வு காணும் முயற்சி: கல்முனை தலைமை பள்ளிவாசலுடன் மாளிகைக்காடு பிரதிநிதிகள் முக்கிய கலந்துரையாடல்
    மாளிகைக்காடு மையவாடிக்கு நிரந்தரத் தீர்வு காணும் முயற்சி: கல்முனை தலைமை பள்ளிவாசலுடன் மாளிகைக்காடு பிரதிநிதிகள் முக்கிய கலந்துரையாடல் நூருல்...
  • சத்துருக்கொண்டான் படுகொலை..! முறைப்பாடளித்த நபர் குற்றப்புலனாய்வுப் பிரிவின் 4 ஆம் மாடியில்..!இரா .சாணக்கியன்
    சத்துருக்கொண்டான் படுகொலை..! முறைப்பாடளித்த நபர் குற்றப்புலனாய்வுப் பிரிவின் 4 ஆம் மாடியில்..!இரா .சாணக்கியன்  சத்துருக்கொண்டான் படுகொலை: பா...
  • க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு
    க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு நாடு முழுவதும் ஆகஸ்ட் 10ஆம் திகதி தொடங்கி செப்டெம்பர் 5ஆம் திகதி வரை 2,532...
  • “த்ரிஷாவிடம் உதயநிதி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” - குஷ்பு
    “த்ரிஷாவிடம் உதயநிதி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்”  - குஷ்பு  ‘பொது மேடையில் திரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டா...
  • கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பர்தா அணிந்து கடமையேற்கத் தடையா?
    கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பர்தா அணிந்து கடமையேற்கத் தடையா? : பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என வைத்தியசாலை அத்தியட்சகர் உற...

Total Page Views

Facebook

அண்மைய செய்திகள்

செய்திக் காப்பகம்

Copyright © VTN News