
பலத்த பாதுகாப்போடு சொகுசு வாகனங்கள் அதிவேகமாக விமான நிலையத்திற்குச் செல்லும் காணொளிகள் தற்போது வெளியாகியுள்ளன.
கப்பல் வாயிலாக தப்பியோடிய சிலர்
இதேவேளை, கொழும்பு துறைமுகத்தை நோக்கி சில அதிசொகுசு வாகனங்கள் விரைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன், அங்கு இரண்டு கப்பல்களின் மூலம் அங்கிருந்து சிலர் வெளியேறியுள்ளதாகவும், கப்பல் பயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றதுகடற்படைக்கு சொந்தமான சித்துரலு மற்றும் கஜபாகு என்ற இரு கப்பல்களில், சில குழுவினர், பொருட்களுடன் செல்லும் காணொளியொன்று வெளியாகியுள்ளது.
துறைமுகத்தில் பணிபுரியும் ஒருவரால் பதிவுசெய்யப்பட்ட இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.ஆனால், பயணப்பொதிகளுடன் பயணம் செய்யும் இவர்கள் யார் என்பது குறித்த தகவல்கள் தெளிவாக கிடைக்கவில்லை
No comments: