யாழ்ப்பாணம் நெல்லியடிப்பகுதியில் வேகக்கட்டுப்பாடை இழந்த டிப்பர் வாகனம் கோயில் திருவிழாவிற்குள் நுழைந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயம் அடைந்துள்ளனர்.
அந்த ஆலயத்தில் நேற்று (16) சப்பரத்திருவிழா இடம்பெற்றுள்ளது.
அவ்வேளையில், யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் மிக வேகமாக வந்த டிப்பர் வாகனம் அங்குள்ள பக்தர்கள் மத்தியில் புகுந்து அவர்களை மோதித்தள்ளிவிட்டு தப்பிச்சென்றுள்ளது.
சம்பவத்தில் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையிலும், மேலும் 5 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் மணல் கடத்திய போது, காவல்துறையினர் வாகனத்தை வழி மறித்துள்ளனர். எனினும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டை மீறி மிக வேகமாக தப்பி சென்ற போதே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இச் சம்பவத்தை விசாரணைக்கு எடுத்த காவற்துறையினர் தப்பிசென்ற டிப்பர் வாகனத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர் .
No comments: