News Just In

6/08/2022 06:27:00 AM

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக பேராசிரியர் செல்வராஜா நியமனம்!

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக பேராசிரியர் எம். செல்வராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் இந்த நியமனக் கடிதம் செவ்வாய்க்கிழமை 07.06.2022 வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பின் முனைக்காடு கிராமத்தில் பிறந்த செல்வராஜா, ஆசிரியர் சேவையில் இணைந்து அதிபர், விரிவுரையாளர், முதுநிலை விரிவுரையாளர், துறைத்தலைவர், கலை, கலாசார பீடங்களின் பீடாதிபதி ஆகிய பதவிகளை வகித்து வந்துள்ளார்.

மேலும் அவர் இலங்கைப் பல்கலைக்கழகங்களிலும், இந்தியப் பல்கலைக்கழகங்களிலும் வருகைதரு விரிவுரையாளராகவும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

.எச்.ஹுஸைன்

No comments: