ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலார்கள் சம்மேளனத்தின் புதிய நிர்வாகத் தெரிவு, மாவட்டத்திலுள்ள முஸ்லிம் ஊடகவியலாளர்கள் பலரின் பங்குபற்றலுடன், ஏறாவூரில் சனிக்கிழமை (08.01.2022) மாலை நடைபெற்றது.
2022ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றதுடன், செயற் திட்டங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
சம்மேளனத்தின் புதிய தலைவராக ஏ.எம். அஸ்மி தெரிவு செய்யப்பட்டதுடன், செயலாளராக எம்.ரீ.எம்.பாரிஸ், பொருளாளராக ஏ.எச்.ஏ.ஹூசைன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
பிரதித் தலைவர்களாக ஐ.எம்.ஐ.பாறூக், எம்.எஸ்.எம்.சஜீ, உப செயலாளராக எம்.ஐ.அப்துல் நஸார், ஊடக இணைப்பாளர்களாக எஸ்.எம்.எம்.முர்ஷித், எம்.ஏ.சீ.எம்.ஜலீஸ், எம்.ஜீ.ஏ.நாஸர், கணக்குப் பரிசோதகராக எச்.எம்.எம்.பர்ஸான் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
No comments: