News Just In

1/18/2022 05:56:00 PM

சப்புகஸ்கந்தவில் மின் உற்பத்தி நிறுத்தம்?

எரிபொருள் இன்மையால் சப்புகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்திலும் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெட்ரோலிய கூட்டுத்தாபனம் ஊடாக 900 மெட்ரிக்தொன் எரிபொருளை இலங்கை மின்சார சபைக்கு வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை இலங்கை மின்சார சபைக்கு எரிபொருள் வழங்குமாறு மின்சக்தி அமைச்சர் முன்வைத்த கோரிக்கையை லங்கா ஐஓசி நிறுவனம் நிராகரித்துள்ளது.

தங்களுக்கு போதுமான அளவு எரிபொருள் இல்லாத காரணத்தினால் இவ்வாறு குறித்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments: