மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்க பராமரிப்பில் இருந்து கல்வி பயின்று 2020 சாதாரண தரப் பரீட்சையில் சிறப்புச் சித்தி பெற்ற மாணவர்கள் இன்று (02.02.2022) பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.
கல்வி அபிவிருத்திச் சங்க சிவநேசராச மண்டபத்தில் நடைபெற்ற மேற்படி நிகழ்வை கல்வி அபிவிருத்திச் சங்க பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.
பழைய மாணவர் சங்க தலைவர் மோகனராசா கஜரூபன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கனடா RCNR கல்லூரியின் நிறைவேற்று பணிப்பாளர் பாலசுப்பிரமணியம் விமலநாதன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
எட்டுப் பாடங்களில் அதிவிசேட சித்தி பெற்ற 05 மாணவர்களுடன் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களும் கெளரவிக்கப்பட்டனர். மேற்படி நிகழ்வானது சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாக நடைபெற்றது.
No comments: