News Just In

1/18/2022 05:41:00 PM

மட்டக்களப்பில் திடீர் என்று உதித்த இராணுவக் குடியிருப்பு!


மட்டக்களப்பு மாவட்டத்தில் புன்னைக்குடா கடற்கரைப் பிரதேசத்தில் பாரிய இரும்புக் குளாய்கள் கொண்டுவரப்பட்டு நிலத்தினுள் பதிக்கப்படும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதேவேளை, அருகில் இருக்கும் பனை-தென்னை மரங்களில் ‘இது இராணுவத்தின் சொத்து- அனுமதியின்றி நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது’ என்ற அறிவிப்பு அட்டைகள் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதே பிரதேசத்தில் தென்னலங்கையில் இருந்து கொண்டுவரப்பட்ட சிங்கள மக்களுக்கு காணிகள் வழங்கப்பட்டு அவர்களைக் குடியேற்றும் நடவடிக்கை  அண்மையில் நடைபெற்றிருந்தது.எதற்காக அந்தக் குழா ய்கள்     மட்டக்களப்பு, புன்னைக்குடா கடற்கரையில் பதிக்கப்பட்டு வருகின்றன?
குழாய்கள்  பதிக்கப்பட்டுவரும் பிரதேசத்திற்கு அருகே எதற்காக இராணு எச்சரிக்கைகள் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன?அதே இடத்தில் எதற்காக சிங்கள மக்கள் குயேற்றப்படுகின்றார்கள்?அந்தப் பிரதேச வாழ் மக்களின் இதுபோன்ற கேள்விகளுக்கு சரியான பதில் இதுவரை அவர்களுக்கு வழங்கப்படவில்லை

No comments: