கல்வி வெளியீட்டு திணைக்களத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பாடநூல்கள் நாடு பூராகவும் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கு இலவச பாடநூல்கள் விநியோகம் செய்யும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (24) இடம்பெற்றது.
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீரின் வழிகாட்டலில் கோட்டக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்களினால் பாடநூல்கள் வழங்கி வைக்கப்பட்டன.
(எச்.எம்.எம்.பர்ஸான்)
No comments: