அரசாங்கத்தின் சுபிட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக சௌபாக்கியா வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பதினான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பல்வேறு வேலைத்திட்டங்கள் இடம் பெற்று வருகின்றது.
அந்த வகையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் 163 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் முதற்கட்டமாக ஐம்பது பயனாளிகளுக்கு வாழ்வாதார பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச் முஸம்மில் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வாழ்வாதார பொருட்களை வழங்கி வைத்தார்.
இந் நிகழ்ல்வில் ஓட்டமாவடி மற்றும் வாழைச்Nனை பிரதேச சபை உறுப்பினர்கள், முன்னாள் ஏறாவூர் நகரசபை தவிசாளர் எம்.ஐ தஸ்லிம், பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.றுவைத், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.ருமைஸ், பிரதேச செயலக அதிகாரிகளும் கலந்து கொணடனர்.
அரசாங்கத்தின் சுபிட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக சௌபாக்கியா வேலைத்திட்டத்தின் கீழ் இரண்டு லட்சம் குடும்பங்களை மேன்படுத்தம் திட்டத்தில் தையல் இயந்திரம், மாசி உற்பத்தி மற்றும் மீன் சந்தைப்படுத்தல் வசதிக்காக குளிர்சாதன பெட்டிகள் போன்ற வாழ்வாதார பொருட்கள் மக்கள் பங்களிப்புடன் ஒரு குடும்பத்திற்கு ஐம்பதாயிரம் ரூபா வீதம் 163 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் முதற்கட்டமாக ஐம்பது பயனாளிகளுக்கு கோறளைபற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் வழங்கி வைக்கப்பட்டன.
எஸ்.எம்.எம்.முர்ஷித்
No comments: