மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு (வவுணதீவு) பிரதேச செயலக பிரிவில் கொத்தியாபுலை கிராமத்தில் 18.12.2021 ம் திகதி சனிக்கிழமை பிற்பகல் வேளையில் பெரும் மழையுடன் வீசிய கடும் சுழல்காற்றினால் வீட்டுக்கூரைகள் சேதமடைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடாரங்களும், உலர் உணவுப்பொதிகளும் மட்டக்களப்பு ஆனந்தகிரி அறப்பணி சபையின் ஏற்பாட்டில் 19.12.2021 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடர் நிவாரண உதவிகளாக வழங்கிவைக்கப்பட்டது.
இவ் மனிதாபிமான உதவியை ஆனந்தகிரி அறப்பணி சபையின் தலைவர் திரு.லோ.தீபாகரன், செயலாளர் திரு.நே.பிருந்தாபன், அமைப்பின் பிரதான இணைப்பாளர் திரு. உ.சுரேஸ்குமார், வாகரை பிரதேச இணைப்பாளர் திரு. விக்கி, வவுணதீவு பிரதேச இணைப்பாளர் திரு.விமல்ராஜ் ஆகியோர் சம்பவம் இடம்பெற்ற வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்கிவைத்தனர். இவ் இடர் உதவிக்கான கூடாரங்களை கொள்வனவு செய்வதற்கு குருக்கள்மடத்தை சேர்ந்த திரு.ம.ராஜதீபன் அவர்களும் உலர் உணவுப்பொதிகளை கொள்வனவு செய்வதற்கு அறப்பணி சபையின் வாகரை பிரதேச இணைப்பாளர் திரு. விக்கி அவர்களும் அனுசரணை வழங்கினர்.
இவ் அனர்த்தத்தினால் இப்பகுதியில் பலவீடுகளின் கூரைகள் சேதமடைந்ததுடன், பலன் தரு மரங்களும் முறிந்து விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments: