News Just In

12/07/2021 07:21:00 PM

பாகிஸ்தானில் இலங்கையர் படுகொலை - தேடப்பட்ட இம்தியாஸ் கைது!

பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட பிரியந்த குமார படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பில்லி என்றழைக்கப்படும் இம்தியாஸ் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ராவல்பின்டியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தானிய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 26 பேரை டிசம்பர் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பாகிஸ்தானின் தீவிரவாத தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments: