வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் தேசிய மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி விக்னேஸ்வரனை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.யாழ்ப்பாணம் கோவில் வீதியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பின் பின் கருத்து தெரிவித்த செந்தில் தொண்டமான், விக்னேஸ்வரன் தமது குடும்பத்துடன் நெருக்கமான உறவைப் பேணிவரும் ஒருவர். அவரை நீண்டகாலமாக எனக்குத் தெரியும். அதன் அடிப்படையில் ஒரு சிநேகபூர்வமான சந்திப்பாகவே இன்றைய தினம் அவரைச் சந்தித்துள்ளேன்.
இதன்போது, அரசியல் ரீதியாக எந்த விடயமும் நாம் பேசிக் கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார்
No comments: