News Just In

11/16/2021 08:53:00 PM

கணக்கியல் நிதித்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.சி.ஏ.நாஸர் எழுதிய மூன்று நூல்கள் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் நூலகத்திற்கு அன்பளிப்பு!

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் கணக்கியல் நிதித்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.சி.ஏ.நாஸர் எழுதிய மூன்று நூல்கள் இப்பல்கலைக்கழகத்தின் அஷ்ரப் ஞாபகார்த்த நூலகத்திற்கு அன்பளிப்புச்செய்யப்பட்டுள்ளன. நிதிக்கணக்கியல், கிரயக்கணக்கியல் மற்றும் முகாமைக்கணக்கியல் எனும் மூன்று நூல்களே இவ்வாறு அன்பளிப்புச்செய்யப்பட்டுள்ளன.

இந்நூல்களை நூலாசிரியர் கலாநிதி எம்.சி.ஏ.நாஸர் பிரதம நூலகர் ரிபாயிடீன் எம்.முஹைடீனிடம் வழங்கி வைத்தார். தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ள இந்நூல்கள் உயர் வகுப்பு மாணவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா மாணவர்கள் கணக்காளர் சேவை மற்றும் கணக்காய்வு சேவை போன்ற வற்றிக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு கலாநிதி எம்.சி.ஏ.நாஸர் அவர்கள் ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவருமாவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எஸ்.ஐ.எம்.நிப்ராஸ் 

No comments: