News Just In

8/05/2021 07:45:00 AM

தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஆசிரியர் சங்கங்கள் கூட்டாக கடிதம் அனுப்பிவைப்பு...!!


தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஆசிரியர் சங்கங்கள் கூட்டாக கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார். கடிதத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களாக.

பொது சேவையினை சாதாரன நிலையில் கொண்டு கொண்டு செல்வது தொடர்பான கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்களின் கடமைகள் குறித்து அறிக்கை 04.08.2021 அன்று வெளியிடப்பட்ட கடிதத்திற்கு இணங்காத வகையில் தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்ந்து ஈடுபடும் என்பது தொடர்பாக

மாகாணக் கல்வி பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின்படி, பொது சேவை வழமைபோல் நடாத்தப்பட வேண்டும் என ஈடி/09/12/01/02/2021 மற்றும் 2021.08.01 கடிதத்தின்படி தற்போது தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால், அவர்கள் பாடசலையின் கல்வி நடவடிக்கையாக பாடசாலைக்கு வருகை தருவதைத் தவிர்த்து உள்ளனர் என்பதை உங்களுக்கு அறியத்தருகின்றோம்.

அவ்வாறிருக்கும்வலையில் , இன்று, 04.08.2021, நீங்கள் மீண்டும் ED, 09/12/06/05/01-2021sub1 க்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளீர்கள், 01.08.2021 தேதியிட்ட உங்கள் கடிதத்துடன் பாடசாலையில் செயற்பட வேண்டிய கடமைகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நீங்கள் வெளியிட்ட இந்த கடிதத்திற்கும் 03.08.2021 அன்று நடைபெற்ற கலந்துரையாடலிலும் தொழிற்சங்கங்களான நாங்கள் கடும் எதிர்ப்பை தெரிவிப்தோடு 01.08.2021 தேதியிட்ட உங்கள் கடிதத்தை ரத்து செய்து 03.08.2021 அன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது தீர்வு கிடைக்கப்பெறாத, முரணான கடிதத்தை வழங்க்கிமை எங்ளின் வணமையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும் ஆசிரியர் அதிபர்களின் தொடர்ந்தும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என்பதை வலியுறுத்துகினறோம்.​

இன்று 2021.08.04 நீங்கள் வழங்கிய மேற்கண்ட கடிதத்தின்படி அனைத்து ஆசிரியர்களும், அதிபர்களும் பாடசாலைக்குப் செல்வதைத் தவிர்க்கிறார்கள் என்பதை நாங்கள் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம்.
மேலும் இக்கடிதத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட தொழிற்சங்க தலைவர்கள் கையொப்பமிட்டு கல்வியமைச்சின் செயலாளருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளதாக உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் குறிப்பிட்டார்.



No comments: