News Just In

7/06/2021 07:11:00 PM

"எனது பிள்ளைக்கு நீதி கிடைக்க வேண்டும்"- இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவரின் தாயார் வேண்டுகோள்...!!


கடந்த மாதம் 21ம் திகதி இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று(06) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.ரிஸ்வான் முன்னிலையில் நடைபெற்றது.

குறித்த வழக்கு தொடர்பான விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்டபோது துப்பாக்கிச்சூடு நடத்திய மெய்பாதுகாவலர் விளக்கமறியலில் இருந்த நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டமையால் இன்றைய தினம் நீதிமன்றத்திற்கு ஆஜர் படுத்தப்படவில்லை. துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவரின் தந்தை மற்றும் தாய் ஆகியோர் இன்று குறித்த வழக்கிற்கு சென்றிருந்தனர்.

அத்துடன், குறித் வழக்கு தொடர்பான ஆவணங்கள் உரியமுறையில் சமர்ப்பிகப்படாமையால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (09.07.2021) வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி எம்.கலதாஸ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலரால் சுட்டுக்கொல்லப்பட்ட பாலசுந்தரத்தின் வழக்கு இன்றைய தினம் எடுத்துக்கொள்ளப்பட்டது இதன்போது பொலிஸ் தரப்பினரால் இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பப்பட வேண்டிய ஆவணங்களை சமர்பிற்ப்பதற்கு மன்றுக்கு கொண்டுவர பட்டிருந்தது.

கொலை சம்பவம் 21ஆம் திகதி இடம் பெற்றிருந்த போதிலும் சீசிடிவியினுடைய சில தரவுகள் கொண்டுவரப்படவில்லை இது தொடர்பாக நீதிமன்றம் கவனத்திற்கு கொண்டு வந்திருந்த போதிலும் 14 மற்றும் 15 தினங்களுக்கு மேலாகவும் உரிய முறையில் நீதிமன்ற அனுமதியுடன் சிசிடிவி இணைப்புக்கள் அல்லது ஹார்ட்டிஸ்க் இணைப்புகள் எதையும் பெற்றுக் கொள்ள பட்டிருக்கவில்லை பெற்றுக்கொள்ள பட்டிருப்பதை கூட நீதிமன்றத்துக்கு முறையாக சமர்ப்பிக்கப்படவில்லை.

இதனால் எதிரிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பின்னடைவு ஏற்படுத்தும் என்ற ஒரு விடயத்தையும் குறித்த இந்த விசாரணையின் மட்டக்களப்பு பொலிஸார் மிகவும் அசமந்தமான நிலையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை கௌரவம் மன்றுக்கு பாதிக்கப்பட்டவர் சார்பில் ஆஜராகி இருந்த நாங்கள் தெரிவித்து இருந்தோம்.

அத்துடன் இரசாயன பகுப்பாய்வுக்கு வழங்க கொண்டு வரப்பட்டு இருந்த ஆவணங்களில் சில குறைபாடுகள் இருந்தது இரத்த மாதிரிகள் கூட கொண்டுவரப்படவில்லை ஆகவே இவை அனைத்தையும் நீதிமன்றத்திற்கு கொண்டு வந்து சமர்ப்பிப்பதற்காக பிரிதொரு தினமாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை (09.07.2021) குறித்த வழக்கை மீண்டும் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.




No comments: