News Just In

7/24/2021 03:12:00 PM

மட்டக்களப்பு- கல்லடி வேலூர் பகுதியில் அமையவுள்ள பாரிய விளையாட்டு மைதானத்தின் நிர்மானப் பணிகள் தொடர்பான கலந்துரையாடல்...!!


ஜனாதிபதியின் சுவிசேஷத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்துக்கு அமைவாக அமைச்சர் நாமல் ராஜபக்ச அவர்களின் அமைச்சின் கீழ் மட்டக்களப்பில் மூன்று பிரதான விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட உள்ள திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு கல்லடி வேலூர் பகுதியில் அமையவுள்ள பாரிய அளவிலான விளையாட்டு மைதானத்தின் நிர்மானப் பணிகள் தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று காலை குறித்த மைதானத்தில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் மைதானத்தின் அமைவிடம் தொடர்பாகவும் எவ்வாறு மைதான கட்டுமான பணிகளை முன்னெடுப்பது தொடர்பாகவும் இந்த மைதானத்தினை எந்த விளையாட்டு துறையினை அதிகளவில் மேம்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இந்த மைதானத்தினை பல்வேறுபட்ட விளையாட்டு துறைகளுக்கமைவாக இதனை தயார்படுத்தி அத்துறைகளில் அதிகளவான இளைஞர்களை உள்வாங்கவேண்டும் என்கின்ற கருத்தும் அரச அதிகாரிகளினால் முன்வைக்கப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின் இனைத்தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வாசுதேவன்,

மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் ஜீ.அருணன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் சுதர்சன், மண்முனை வடக்கு பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.சிவகுமார், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் தயாபரன் மற்றும் விளையாட்டு கழக உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.















No comments: