தாழங்குடா சமுர்த்தி வங்கி வீதியைச் சேர்ந்த மேசன் தொழிலாளியான 45 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான விக்டர் சுஜித்குமார் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட சண்டையை அடுத்து சம்பவ தினமான நேற்று (09) மனைவி பிள்ளைகளுடன் அவரது தாயார் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் தனிமையில் இருந்த குறித்த நபர் வீட்டின் கூரையில் கயிற்றின் உதவியுடன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
குறித்த சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments: