போரதீவுப்பற்று பிரதேச இளைஞர் கழக் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் ஒன்று போரதீவுப்பற்றுப் பிரதேச செலக கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை(28) இளைஞர் சேவை உத்தியோகஸ்த்தர் கே.சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா, போரதீவுப் பற்று பிரதே செயலாளர் ஆர்.இராகுலநாயகி, அகிலன் பவுண்டேசன் அமைப்பின் இலங்கைக்கான இணைப்பாளர் வி.ஆர்.மகேந்திரன், மற்றும் போரதீவுப்பற்று பிரதே இளைஞர் யுவதிகள், உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
அகிலன் பவுண்டேசன், அமைப்பு அனுசரணையில் நடைபெற்ற இந்த இரத்ததான முகாமில் 70 இற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினர்.
இதன்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவு கலந்து கொண்டு இரத்த நன்கொடைகளைப் பெற்றுக்கொண்டனர்.
No comments: