கரடி போக்கு சந்தியில் இருந்து பெரிய பரந்தன் ஊடாக பூநகரி வீதிக்குச் செல்லும் வழியில் 5 ஆம் வாய்க்கால் பகுதியில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
யாழ் மாவட்டத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் விடுமுறைக்காக வீடு சென்று யாழ் நோக்கி சென்ற போது வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வாய்க்காலுக்குள் வீழந்ததன் காரணமாக பொலிஸ் உத்தியோகத்தர் பலியாகியுள்ளார்.
சடலம் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்திசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments: