News Just In

6/28/2021 06:47:00 AM

சிறைச்சாலை திணைக்களம் சிறைக்கைதிகளுக்கு விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு...!!


சிறைச்சாலை சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து ஆர்ப்பாட்டம் செய்யும் எந்த ஒரு கைதிக்கும் மன்னிப்பு வழங்குவதற்கு பரிந்துரை செய்யாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடக பேச்சாளரும், சிறைச்சாலை ஆணையாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலை திணைக்களம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

´சிறைச்சாலைகளின் கூரைகளில் ஆர்ப்பாட்டம் செய்வதன் மூலம் சிறை பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் நடந்து கொள்ளும் எந்தவொரு கைதிக்கும் எதிர்காலத்தில் எந்த விதமான மன்னிப்பு கோரவும் நாங்கள் பரிந்துரைக்க போவதில்லை. இவ்வாறு செயற்பட்டு சிறைச்சாலை சொத்துக்களை சேதப்படுத்தும் கைதிகள் குறித்து சிறைச்சாலை திணைக்களம் கடுமையான தீர்மானங்களை எடுத்துள்ளது. ” என்றார்.

No comments: