இலங்கை விமானப் படையின் செஸ்னா 150 ரக விமானம் ஒன்று திருகோணமலை, நிலாவெளி இறக்கண்டி பிரதேசத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விமானம் தரையிறக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் அதில் பயணித்த இரு விமானிகளுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என்றும் விமானப்படை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்
விமானிகளுக்கான அடிப்படை பயிற்சிக்காக இந்த வகை விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இன்று(7) காலை 10.22 மணிக்கும் சீனக்குடா விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்ட இவ்விமானம் 10.48 மணியளவில் தரையிறக்கப்பட்டதாகவும் விமானிகளின் சாதுர்யத்தினால் பாரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு விமானப்படை தலைமையகம் அறிவித்துள்ளது.
No comments: