News Just In

5/05/2021 06:53:00 PM

தந்தையால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மகன் கொலை...!!


மொரவக்க, அலபலாதெணிய பிரதேசத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குடும்பத் தகராறு காரணமாக தந்தையால் அவரது மகன் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இவ்வாறு கொலை செய்யப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

33 வயதுடைய அலபலாதெணிய, நயாதொல பிரதேசத்தை சேர்ந்த நபரே கொலை செய்யப்பட்டவர் ஆவார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரை கைது செய்ய மொரவக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments: