News Just In

5/08/2021 08:47:00 AM

கொரோனா பரவலைத் தடுக்க ஓட்டமாவடியில் விசேட விழிப்பூட்டல் நடவடிக்கை...!!


(எச்.எம்.எம்.பர்ஸான்)
மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் நாளாந்தம் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

இதனைக் கருத்திற் கொண்டு கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த வாழைச்சேனை பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் சுகாதார பிரிவினர்கள் இணைந்து பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை (7) ஓட்டமாவடி பகுதியில் பொலிஸாரும், இராணுவமும் இணைந்து மக்கள் மத்தியில் கொரோனா நோய் தொடர்பான விசேட விழிப்பூட்டல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இவ் விழிப்பூட்டும் நடவடிக்கையில் வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜீ.எஸ். ஜயசுந்தர, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி சீ.ஐ.சந்திர குமார மற்றும் சித்தாண்டி இராணுவ படைப் பிரிவினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு துண்டுப் பிரசுரங்கள் வழங்கி மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர்.





No comments: