இன்று (17) முதல் 31ஆம் திகதி வரை இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நாடு முழுவதும் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், அத்தியவசிய தேவைக்காக வீட்டிலிருந்து ஏனைய நேரங்களில் வெளியேறும் நபர்களின் தேசிய அடையாள அட்டையின் கடைசி இலக்கத்தினை பாதுகாப்புப் படையினர் சோதனையிடும் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீட்டிலிருந்து வீதிக்கு வரும் நபர்களின் தேசிய அடையாள அட்டையின் கடைசி இலக்கத்தை சரிபார்க்கும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்சய பெரமுனவின் வழிகாட்டலில் பொலிஸார் இன்று (17) காலை முதல் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments: