News Just In

5/21/2021 07:26:00 PM

மட்டக்களப்பு மாநகர சபையால் அபிவிருத்தி செய்யப்படவுள்ள கொக்குவில் மற்றும் நாவற்குடா சந்தைகளை பார்வையிட்ட மாநகர முதல்வர் தலைமையிலான குழுவினர்...!!


மட்டக்களப்பு மாநகர சபையால் உலக வங்கியின் நிதி அனுசரணையில் நாவற்குடா சந்தை மற்றும் கொக்குவில் சந்தை ஆகியன அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளன.

குறித்த சந்தைகளுக்கான அபிவிருத்தி பணிகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுக்கை மேற்கொள்ளும் முகமாக மாநகர சபை முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையிலான குழுவினர் குறித்த சந்தை பகுதிகளை இன்று களவிஜயம் ஒன்றினை மேற்கொண்டு பார்வையிட்டனர்.

உலக வங்கியின் நிதி அனுசரணையில் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கு 2019 ஆம் ஆண்டு அனுமதி பெறப்பட்டிருந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு அதன் முதற்கட்ட வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு நிறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது 2021 ஆம் ஆண்டு இரண்டாம் கட்ட செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தில் நாவற்குடா மற்றும் கொக்குவில் சந்தைகள் அபிவிருத்தி செய்யப்பட இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.








No comments: